ஆப்நகரம்

கரூர்: ஓய்வூதியதாரர்களின் குறைகளை தீர்க்க உத்தரவு!

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது

Authored bySM Prabu | Samayam Tamil 13 Dec 2022, 4:43 pm
கரூர் மாவட்ட கருவூலம் மூலம் 4,165 ஓய்வூதியர்களும், சார்நிலை கருவூலங்களான அரவக்குறிச்சியில் 703 ஓய்வூதியர்களும், கரூரில் 301 ஓய்வூதியர்களும், குளித்தலையில் 1830 ஓய்வூதியர்களும், கிருஷ்ணராயபுரத்தில் 250 ஓய்வூதியர்களும், கடவூரில் 223 ஓய்வூதியர்களும் என் 7472 ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.
Samayam Tamil ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


இந்த நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. அதில், ஓய்வூதிய பலன்கள். புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் மூலம் மருத்துவ செலவினத்தொகை. சிறப்பு சேமநல நிதி. செயற்கைக்கால் வேண்டியது, நிலுவைத்தொகைகள், ஊதிய முரன்பாட்டால் ஏற்பட்ட ஓய்வூதிய முரன்பாடுகள் கலைதல் என்பன உள்ளிட்ட 19 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றது.

வரப்பெற்ற மனுக்களை விரைந்து முடிக்க சமந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளது. ஓய்வூதியர்களின் மீதும் அவர்களின் கோரிக்கை மனுக்கள் மீதும் கனிவுடன் பரிசீலனை செய்து அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் அறிவுறுத்தியுள்ளார்.
மோடி மீண்டும் பிரதமராக வேண்டி கோபூஜை... கரூரில் தான் இப்படி!
அதன்பின்னர் ஓய்வூதியர்களிடமிருந்து 14 புதிய கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்று துறைசார்ந்து அலுவலர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில், சென்னை ஓய்வூதிய இயக்குநரக துணை இயக்குநர் மதிவாணன், கணக்கு அலுவலர் ராஜசேகர், மாவட்ட கருவூல அலுவலர் திருவேங்கடம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) அமலி சாந்த குமாரி. தனித்துணை ஆட்சியர் கைபுதீன் உட்பட பலர் உடனிருந்தனர்.
எழுத்தாளர் பற்றி
SM Prabu
நான் மணிகண்ட பிரபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை, எழுத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பயணித்து வருகிறேன். அரசியல், நீதிமன்றம், அரசு சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். செய்திகளை தாண்டி அதன் பின்புலங்களை ஆராய்ந்து கட்டுரைகளாக தந்து வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் எவ்வித சமரசமும் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி