ஆப்நகரம்

Nenjukku Neethi: கரூரில் களையிழந்ததா 'நெஞ்சுக்கு நீதி' - நடந்தது என்ன?

கரூரில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள நெஞ்சுக்கு நீதி படத்தை கட்சி நிர்வாகிகளே குவிந்ததால் பொதுமக்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Samayam Tamil 20 May 2022, 12:28 pm
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும், திமுக இளைஞரணி செயலாளுரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில உருவாகியுள்ள 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil nenjukku neethi release


அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆரி அர்ஜூனன், தன்யா ரவிச்சந்திரன், மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வெளியாகியுள்ள இந்த படத்தை அந்த பகுதிகளில் உள்ள அமைச்சர்கள் திருவிழாவை போல் கொண்டாடுகின்றனர்.

மதுரையில் சுமார் 50 அடி உயரத்தில் அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டின் பேரில் பிரமாண்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதோடு காலையில் முதல் காட்சியை அவர் தியேட்டருக்கு நேரில் சென்று பார்வையிட்டர்.


அந்த வகையில், கரூர் மாவட்டத்திலும், நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகியுள்ளது. கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 7 தியேட்டர்களில் ஏற்கனவே கே.ஜி.எப்-2, டான் உள்ளிட்ட படங்களில் திரையரங்குகளில் ஓடி வரும் நிலையில், கலையரங்கம் சினிமாஸ் தியேட்டரில் மட்டும் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகியுள்ளது.

காலை 11 மணி காட்சியின் அனைத்து டிக்கெட்டுகளையும் கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் , அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களே வாங்கி தங்களது நண்பர்கள், குடும்பத்தினருக்கு வழங்கியதால், தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ஆனால், உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் பலரும், பொதுமக்கள் வராததால் தான் திமுக நிர்வாகிகள் டிக்கெட்டுகளை வாங்கி ஹவுஸ்புல் காட்சியாக மாற்றியுள்ளதாக தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அதோடு, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நேரம் என்பதால் இளைஞர்கள் கூட்டம் அனைத்து படங்களுக்கும் குறைவாக காணப்படுவதாக தியேட்டர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி