ஆப்நகரம்

அண்ணாமலையின் ஓட்டுநர் மீது தாக்குதல்... திமுக அராஜகமா?

தொடர்ந்து இரண்டாவது நாளாக கரூர் திமுகவினர் கொலைவெறி தாக்குதல்

Samayam Tamil 22 Mar 2021, 4:53 pm
அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி அஇஅதிமுக கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் திரு_அண்ணாமலை IPS அவர்களின் வாகன ஓட்டுனர் திரு_பாலமுருகன் மீது கரூர் திமுகவினர் கொலைவெறித் தாக்குதல்.
Samayam Tamil karur dmk attack


கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புன்னம் சத்திரம் சேரன் பள்ளி அருகே நேற்று மாலை பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திரு.அண்ணாமலை அவர்களின் பிரச்சார வாகனம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் காெண்டிருந்போது

அரவக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த திமுகவினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பாஜக பிரச்சார வாகன ஓட்டுனர் பாலமுருகன் பயங்கரமாக தாக்கப்பட்டு மண்டை உடைந்து பலத்த காயம் ஏற்பட்டு சம்ப இடத்தில் மயங்கி விழுந்தார்.

உதவி கேட்டு கண் கலங்கிய நடிகர் தீப்பெட்டி கணேசன் மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி

உடன் இருந்த P.கார்த்தி என்பவரையும் தாக்கியுள்ளனர். இருவரும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி