ஆப்நகரம்

பட்டா மாற்ற ரூ.5 ஆயிரம் லஞ்சம்... முன்னாள் ராணுவ வீரர் செய்தது என்ன?

கரூரில் தனிப்பட்டா கோரி விண்ணப்பித்த நபரிடம் நிள அளவை லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார்.

Samayam Tamil 26 Apr 2022, 5:31 am
கரூர் - மதுரை பைபாஸ் சாலையில் உள்ள எல்.வி.பி நகர் பகுதியில் வசிப்பவர் சரவணன்(46). இவர் கூட்டுப்பட்டாவிலிருந்து தனிப்பட்டாவிற்கு மாற்ற, நில அளவையர் துறைக்கு முயலும் செல்லும் போது, அங்குள்ள பீல்டு சர்வையரான ரவி (40) என்பவர், தனிப்பட்டா மாறுதலுக்கு ரூ.8 ஆயிரம் கேட்டுள்ளார்.
Samayam Tamil karur taluk office


அதற்கு, முன்னாள் ராணுவ வீரர் சரவணன் முடியாது என்று கூற, இறுதியில் ரூ.5 ஆயிரம் தான் இறுதி என்று கூறி பணத்துடன் வாருங்கள் உடனே மாற்றித்தருகின்றேன் என்று கூறியுள்ளார் ரவி. இந்நிலையில், கரூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் கரூர் தாலுகா அலுவலகத்தின் பின்புறம் உள்ள நில அளவைத்துறையில் பகிரங்கமாக லஞ்சம் கேட்கின்றார்கள், என்று சரவணன் முறையிட்டுள்ளார்.

புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி நடராஜன் தலைமையிலான போலீஸார், முன்னாள் ராணுவ வீரரை ரசாயனம் தடவிய பணத்துடன் அனுப்பி ரவியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக பிடித்து விசாரித்து வருகின்றனர்.
சாம்சங் கேலக்ஸி M32 வெல்ல அட்டகாசமான வாய்ப்பு. இந்த படிவத்தை பூர்த்தி செய்து பல கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லுங்கள்

மேலும், இதே போல, கூட்டுப்பட்டாவிலிருந்து தனிப்பட்டா மாற்றம் எத்தனை நடந்துள்ளது. யார், யாரிடம் எவ்வளவு வாங்கியுள்ளார். இவரிடம் வாங்கிய பணம் இவருக்கு மட்டும் தானா ? மேல் அதிகாரிகள் யாரேனும் உள்ளனரா ? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

கரூர் தாலுகா அலுவலக வளாகத்தில் நிள அளவையர் லஞ்ச புகாரில் சிக்கியுள்ள சம்பவ அதிகாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி