ஆப்நகரம்

கரூர் நகர்புற உள்ளாட்சி தேர்தல்: நேர்மையாக நடக்குமா என பொதுமக்கள் அச்சம்!

கரூர் மாநகராட்சி பொறுத்தவரை தேர்தல் அலுவலர்கள் பாராமுகமாக செயல்பட்டு வருவதால்

Samayam Tamil 28 Jan 2022, 7:33 pm
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று வேட்பு மனு வாங்கும் நிகழ்ச்சியுடன் துவங்கியுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் நகராட்சிகள், பேரூராட்சிகள், மாநகராட்சிகள் ஆகிய பகுதிகளில் தேர்தல் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
Samayam Tamil கோப்புப் படம்


ஆனால் கரூர் மாநகராட்சி பொறுத்தவரை தேர்தல் அலுவலர்கள் பாராமுகமாக செயல்பட்டு வருகின்றனர்.

திமுக வின் பிரம்மாண்ட பெயிண்டிங், மிகப்பெரிய திமுக கட்சியின் வண்ண ஓவியங்களும், வேறு சில இடங்களில் அதிமுகவின் போஸ்டர்கள், சுவர் ஒவியங்களும் தேர்தல் ஆணையம் அளிக்கவில்லை, கரூர் மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இதனை கண்டும் காணாமல் உள்ளது.
கஞ்சா விற்ற இளைஞர்; குண்டர் சட்டத்தில் தூக்கிய போலீஸ்!
தமிழக மின்சாரத்துறை அமைச்சரின் அலுவலகமும், அதிமுகவின் அலுவலகமும் கரூர் தொகுதியில் இதுவரை கூட்டில் வைக்கப்படவில்லை. தேர்தல் அதிகாரிகள் இப்படி நடந்து கொண்டால்,தேர்தல் எப்படி நடக்கும் என்பதில் நடுநிலையாளர்களின் ஒருமித்த கருத்தாகும்.

ஆகவே தமிழக தேர்தல் ஆணையத்தின் பார்வை கரூர் மாவட்டத்தின் மீதும் கரூர் மாநகராட்சி மீதும் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி நகராட்சி ஆகியவைகள் மீது படும் என்கின்றனர் நடுநிலையாளர்கள்.

அடுத்த செய்தி