ஆப்நகரம்

மாட்டு வண்டியில் ராகுல் காந்தி... வண்டி ஓட்டுறது யார் கவனிச்சீங்களா?

காங்கிரஸ் எம்.பி செல்வி ஜோதிமணி மாட்டுவண்டி ஒட்ட, தேசிய தலைவர் ராகுல்காந்தி மாட்டுவண்டியில் பயணம் செய்து விவசாயிகளிடம் கலந்துரையாடினார்

Samayam Tamil 28 Jan 2021, 11:54 am
கரூர் காங்கிரஸ் எம்.பி செல்வி ஜோதிமணி மாட்டுவண்டி ஒட்ட, தேசிய தலைவர் ராகுல்காந்தி மாட்டுவண்டியில் பயணம் செய்து விவசாயிகளிடம் கலந்துரையாடியது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது.
Samayam Tamil MP jothimani drove bull cart


கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், வாங்கல் பகுதியினை அடுத்த மாரிக்கவுண்டன்பாளையத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல்காந்தி, விவசாயிகளிடம் கலந்துரையாட சென்றார். அப்போது முன்னதாக, காரை நிறுத்தி விட்டு மாட்டுவண்டியில் ஏறி பயணம் செய்தார்.

இரட்டை மாட்டுவண்டியினை கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ஓட்டினார். சுமார் 500 மீட்டர் தொலைவில் ராகுல்காந்தி மாட்டுவண்டியில் நின்ற படி விவசாயிகளுக்காக கையசைத்து சென்றதும், அந்த மாட்டுவண்டியினை ஒரு பெண்மணியும், கரூர் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வி ஜோதிமணி ஒட்டியதும் குறிப்பிடத்தக்கது.



என்னை மாதிரி ஒரு அப்பா கிடைப்பது பெரிய விஷயம், விஜய்க்கு புரியல: எஸ்.ஏ. சி.

டெல்லியில் இருந்து வந்த ராகுல்காந்தி நமது இரட்டை மாட்டுவண்டியில் வந்துள்ளாரே என்று வியப்புடன் விவசாயிகள் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி