ஆப்நகரம்

மத்திய அரசுக்கு மின் கட்டண பாக்கி?: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய மின் கட்டண பாக்கியை தமிழக அரசு செலுத்திவிட்டதால் மின் விநியோகத்தில் எவ்வித பிரச்சனையும் இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 20 Aug 2022, 8:58 am
கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள திருமாநிலையூர் பகுதியில் ஆகஸ்ட் 19 முதல் 29 வரை 10 நாட்கள் புத்தகக் திருவிழா நாடைபெறுகிறது. இதனை, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்ததோடு புத்தக அரங்குகளை பார்வையிட்டார். இந்த புத்தகத் திருவிழாவில் 115 அரங்குகள் அமைக்கப்பட்டு கோடிக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil V. Senthil Balaji


அரங்குகளை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:-
"தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய மின் கட்டண பாக்கி தொகையை செலுத்தாததால், புதிதாக மின் விற்பனை மற்றும் கொள்முதல் செய்யக்கூடாது எனது தெரிவித்ததாக கருத்துக்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதனால் தமிழகத்தில் மீண்டும் மின் தடை ஏற்படுமோ? என்ற பேச்சு எழுந்தது.

இது தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, நடப்பு மாதத்திற்கு 924 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு தமிழக அரசு செலுத்த வேண்டி உள்ளது. தமிழக அரசு முறைப்படி குறிப்பிட்ட தொகையை செலுத்தியுள்ளது. இன்னும் ரூ.70 கோடி மட்டுமே செலுத்த வேண்டி உள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள மின்னணு போர்ட்டலில் தமிழக அரசு செலுத்திய தொகை அதில் காண்பிக்கப்படவில்லை. இதனால், இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. தற்போது வங்கி விடுமுறையாக உள்ளதால் வரும் திங்கட்கிழமை செலுத்த வேண்டிய மீதி 70 கோடியை தமிழக அரசு செலுத்தி விடும். இதனால் தமிழக மக்களும், ஊடகவியலாளர்களும் எவ்வித குழப்பமும் ஏற்படுத்திட வேண்டாம். தமிழகத்தில் சீரான மின் விநியோகம் தொடர்ந்து நடைபெறும்” இவ்வாறு கூறினார்.

அடுத்த செய்தி