ஆப்நகரம்

சரக்கு மட்டும்தான் பிளாக்ல கிடைக்குமா?; பின்வாசல் திறந்த துணி கடைகளுக்கு சீல்!

கரூரில் கொரோனா விதிகளை காற்றில் பறக்கவிட்டு பின்வாசல் வழியாக விற்பனையில் ஈடுபட்ட 2 துணி கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் 1 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும் அங்கிருந்து வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை வெளியேற்றி விட்டு கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

Samayam Tamil 8 May 2021, 3:08 pm
கரூர் நகரில் ஏராளமான துணிக்கடைகள் உள்ளன. இவற்றில் சில துணி கடைகளில் கொரோனா விதிகளை காற்றில் பறக்கவிட்டு விற்பனை நடப்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
Samayam Tamil கரூரில் பின்வாசல் வழியாக வியாபாரம் நடக்கிறது
கரூரில் பின்வாசல் வழியாக வியாபாரம் நடக்கிறது


இதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள கடைகளுக்கு விரைந்தனர். அங்கு பெரும்பாலான கடைகள் பூட்டி இருந்தன. ஆனால் பூட்டியிருந்த கடைகளின் பின்புறம் ஆட்கள் நடமாட்டம் இருப்பது தெரிந்தது. எனவே, அந்த கடைகளின் பின்பக்க கதவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பிளாஸ்டிக் தான் சாப்பாடு; விலங்குகள் நிலை பரிதாபம்!

அப்போது 2 துணிக்கடைகளில் பின்புற கதவுகளை திறந்து வைத்து வியாபாரம் செய்தது தெரிந்தது. எனவே கடையின் உரிமையாளர்களை அழைத்த நகராட்சி அதிகாரிகள் கடுமையாக எச்சரித்தனர்.

பின்னர், வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை அங்கிருந்து வெளியேற்றி விட்டு கடைகளை பூட்டி சீல் வைத்தனர். அதுமட்டும் இல்லாமல் அந்த 2 கடைகளிடம் இருந்தும் தலா 50 ஆயிரம் அபராதமாக நகராட்சி அதிகாரிகள் வசூலித்தனர்.

அடுத்த செய்தி