ஆப்நகரம்

புதிய மோட்டார் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் - ஓட்டுநர் தொழிற்சங்கம் வலியுறுத்தல்!

புதிய மோட்டார் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது

Authored bySM Prabu | Samayam Tamil 29 Nov 2022, 6:50 pm
மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் சட்டம் 2019யை திரும்ப பெற வேண்டும் என கரூரில் நடைபெற்ற உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கம் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில பொதுச் செயலாளர் வெற்றிவேல் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கம்
உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கம்


கரூர் அடுத்த வெண்ணமலை பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் உரிமைக்கரங்கள் ஓட்டுனர் தொழிற்சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு மாநில தலைவர் ரத்தினவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் வெற்றிவேல், மாநில பொருளாளர் பக்கிரிசாமி, கரூர் மாவட்ட செயலாளர் பாஸ்கர், பொருளாளர் சிவராஜ் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த நிர்வாகிகள், சங்கத்தின் உறுப்பினர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும், தொடர்ந்து உயர்ந்து வரும் டோல்கேட் கட்டணங்களை குறைக்க வேண்டும், தமிழ்நாடு முழுவதும் ஓட்டுனர் தொழிலை பாதுகாக்க ஆட்டோ கால் டாக்ஸிகளுக்கு ஸ்டாண்ட் அமைக்க அரசு இடம் தந்து ஊக்குவிக்க வேண்டும், தொடர்ந்து உயர்ந்து வரும் வாகன காப்பீடு கட்டணங்களை மத்திய அரசு குறைக்க வேண்டும், பெட்ரோல் டீசல் கேஸ் விலையை மத்திய அரசு ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வந்து விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

டெஸ்ட் பர்சேஸ் முறையை நிறுத்த வேண்டும் - வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை!
நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த மாநில பொதுச் செயலாளர் வெற்றிவேல், போக்குவரத்து காவல்துறையும், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆதாரம் இன்றி வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும். ஆட்டோ கால் டாக்ஸிகளுக்கு தமிழக அரசே ஆப்பை தொடங்கி ஆன்லைன் சேவையை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் சட்டம் 2019யை கேரளா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் திரும்பப் பெற்றது போல தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 1ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
SM Prabu
நான் மணிகண்ட பிரபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை, எழுத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பயணித்து வருகிறேன். அரசியல், நீதிமன்றம், அரசு சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். செய்திகளை தாண்டி அதன் பின்புலங்களை ஆராய்ந்து கட்டுரைகளாக தந்து வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் எவ்வித சமரசமும் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி