ஆப்நகரம்

கண்டெய்னர், லாரி மோதல்; பாவமே இப்படி ஆயிடுச்சே!

குளித்தலை அருகே கண்டெய்னரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.

Samayam Tamil 13 May 2021, 4:49 pm
பெரம்பலூர் மாவட்டம், அய்யலூர் பகுதியை சேர்ந்தவர் முருகராஜ். இவர் சென்னையில் இருந்து கேரளாவிற்கு லோடு ஏற்றுவதற்காக கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்துள்ளார்.
Samayam Tamil விபத்து நடந்த பகுதி
விபத்து நடந்த பகுதி


அதிகாலை 3:30 மணியளவில் திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மணத்தட்டை அருகே வந்தபோது எதிரே கரூரிலிருந்து எம். சாண்ட் ஏற்றுக்கொண்டு கரூர் சுக்காலியூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் லாரியில் வந்தார்.

அப்போது திடீரென லாரியும், கண்டெய்னரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இரு லாரிகளின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இதில் கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த முருகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்தில் கண்டெய்னர் லாரி கிளீனர் சண்முகம் மற்றும் டாரஸ் லாரி டிரைவர் முருகேசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

ஒரே நாளில் 20 பேர் பலி; இங்குமா இப்படி இருக்கு?

பின்னர், இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த இருவரும் கரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி