குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி சவாரி மேடு கிராமத்தை சேர்ந்தவர் கலைவாணி. இவர் கூலி தொழில் செய்து வருகின்றார்.இவருடைய மகள் தேவிகா. இவரும் அதே ஊரை சேர்ந்த நங்கவரம் பேரூராட்சி 6வது வார்டு கவுன்சிலர் குணசேகரன் மகன் கஜேந்திரன். ஆகிய இருவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர்.இந்த காதலுக்கு கஜேந்திரனின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கஜேந்திரனின் உறவினர்கள் சிறுமி தேவிகாவை தாக்கியுள்ளனர்
இந்நிலையில் கடந்த மே 24 ஆம் தேதி சிறுமி தேவிகா கஜேந்திரன் போன் செய்து பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து தேவிகா மற்றும் தேவிகாவின் அக்கா இருவரும் காதலன் கஜேந்திரனிடம் தனியாக பேச சென்றுள்ளனர்.அப்போது கஜேந்திரனின் உறவினர்கள் சிறுமி தேவிகாவை தாக்கியதாகவும் அவர்களிடமிருந்து தேவிகாவின் அக்கா தப்பித்து தனது உறவினர்களிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
கரூரில் ஒருபக்கம் ரெய்டு... இன்னொரு பக்கம் மாரியம்மன் கோவில் திருவிழா... எப்படி சமாளிக்க போகிறது போலீஸ்?
குளித்தலை காவல் நிலையத்தில் புகார்
அதனை தொடர்ந்து தேவிகாவின் உறவினர்கள் கஜேந்திரன் வீட்டிற்கு சென்று கேட்டபோது தேவிகா இங்கு வரவில்லை எங்களுக்கு எதுவும் தெரியாது என மறுத்து விட்டனர். இந்நிலையில் தேவிகாவின் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் விசாரித்தும் தேவிகாவை பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து மறுநாள் 25ஆம் தேதி தனது மகளைக் காணவில்லை என சிறுமி தேவிகாவின் தாயார் கலைவாணி குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கிணற்றில் சடலமாக மிதந்த தேவிகா
அந்த புகாரின் பேரில் குளித்தலை காவல் நிலையத்தில் சிறுமி காணவில்லை என வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் மறுநாள் 26 ஆம் தேதி காலை 7 மணி அளவில் சவாரி மேடு கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் சிறுமி சடலமாக மிதந்துள்ளார்.
மேலும் இது குறித்து குளித்தலை காவல்துறையினருக்கும் முசிறி தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேவிகாவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம்
தேவிகாவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சிறுமியின் இறப்பிற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைத்து சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்போது சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தால் தான் சடலத்தைப் பெற்றுக் கொள்வோம் என தெரிவித்தனர்.
கரூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
அதனை தொடர்ந்து சிறுமியின் பிரேத பரிசோதனையில் தற்கொலை என்று மருத்துவர் கூறியுள்ளார். அவரை கொலை செய்து தான் கிணற்றில் வீசியுள்ளனர். அதனால் மற்றொரு மருத்துவர் மூலம் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று காலை 100க்கும் மேற்பட்ட பெண்ணின் உறவினர்கள் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் சிறுமியின் இறப்பிற்கு காரணமான நபர்களை கைது செய்ய வேண்டும் எனவும் தற்கொலை செய்து கொண்டதாக கூறினால் அவரின் தற்கொலைக்கு காரணமான நபர்களை கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளித்தலை காவல்துறையினர் சிறுமியின் காதலனை கைது செய்துள்ளனர் மேலும் குளித்தலை காவல்துறையினர் சிறுமியின் காதலன் தந்தை குணசேகரன் வயது. கஜேந்திரனின் மாமா முத்தையன்.வயது, கஜேந்திரன் வயது ஆகிய மூன்று நபர்களையும் சிறுமியின் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி சவாரி மேடு கிராமத்தை சேர்ந்தவர் கலைவாணி. இவர் கூலி தொழில் செய்து வருகின்றார்.இவருடைய மகள் தேவிகா. இவரும் அதே ஊரை சேர்ந்த நங்கவரம் பேரூராட்சி 6வது வார்டு கவுன்சிலர் குணசேகரன் மகன் கஜேந்திரன். ஆகிய இருவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர்.இந்த காதலுக்கு கஜேந்திரனின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த மே 24 ஆம் தேதி சிறுமி தேவிகா கஜேந்திரன் போன் செய்து பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து தேவிகா மற்றும் தேவிகாவின் அக்கா இருவரும் காதலன் கஜேந்திரனிடம் தனியாக பேச சென்றுள்ளனர்.அப்போது கஜேந்திரனின் உறவினர்கள் சிறுமி தேவிகாவை தாக்கியதாகவும் அவர்களிடமிருந்து தேவிகாவின் அக்கா தப்பித்து தனது உறவினர்களிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
கரூரில் ஒருபக்கம் ரெய்டு... இன்னொரு பக்கம் மாரியம்மன் கோவில் திருவிழா... எப்படி சமாளிக்க போகிறது போலீஸ்?
குளித்தலை காவல் நிலையத்தில் புகார்
அதனை தொடர்ந்து தேவிகாவின் உறவினர்கள் கஜேந்திரன் வீட்டிற்கு சென்று கேட்டபோது தேவிகா இங்கு வரவில்லை எங்களுக்கு எதுவும் தெரியாது என மறுத்து விட்டனர். இந்நிலையில் தேவிகாவின் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் விசாரித்தும் தேவிகாவை பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து மறுநாள் 25ஆம் தேதி தனது மகளைக் காணவில்லை என சிறுமி தேவிகாவின் தாயார் கலைவாணி குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கிணற்றில் சடலமாக மிதந்த தேவிகா
அந்த புகாரின் பேரில் குளித்தலை காவல் நிலையத்தில் சிறுமி காணவில்லை என வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் மறுநாள் 26 ஆம் தேதி காலை 7 மணி அளவில் சவாரி மேடு கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் சிறுமி சடலமாக மிதந்துள்ளார்.
மேலும் இது குறித்து குளித்தலை காவல்துறையினருக்கும் முசிறி தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேவிகாவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம்
தேவிகாவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சிறுமியின் இறப்பிற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைத்து சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்போது சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தால் தான் சடலத்தைப் பெற்றுக் கொள்வோம் என தெரிவித்தனர்.
கரூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
அதனை தொடர்ந்து சிறுமியின் பிரேத பரிசோதனையில் தற்கொலை என்று மருத்துவர் கூறியுள்ளார். அவரை கொலை செய்து தான் கிணற்றில் வீசியுள்ளனர். அதனால் மற்றொரு மருத்துவர் மூலம் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று காலை 100க்கும் மேற்பட்ட பெண்ணின் உறவினர்கள் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் சிறுமியின் இறப்பிற்கு காரணமான நபர்களை கைது செய்ய வேண்டும் எனவும் தற்கொலை செய்து கொண்டதாக கூறினால் அவரின் தற்கொலைக்கு காரணமான நபர்களை கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளித்தலை காவல்துறையினர் சிறுமியின் காதலனை கைது செய்துள்ளனர் மேலும் குளித்தலை காவல்துறையினர் சிறுமியின் காதலன் தந்தை குணசேகரன் வயது. கஜேந்திரனின் மாமா முத்தையன்.வயது, கஜேந்திரன் வயது ஆகிய மூன்று நபர்களையும் சிறுமியின் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.