ஆப்நகரம்

பணிச் சுமைக்கு இடையே கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய போலீசார்!

பணி சுமைக்கு இடையே போலீசார் காவல் நிலையத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர்.

Samayam Tamil 4 May 2021, 11:42 pm
கரூர் நகர காவல் நிலையம், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில் முதல் நிலை காவலர்களாக பணியாற்றுபவர்கள் நளினி மற்றும் ராஜேந்திரன். கடந்த சில நாட்களாக இருவரும் ஊரடங்கு கால பணி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் பணியாற்றி வந்தனர்.
Samayam Tamil கரூர் காவல் நிலையம்
கரூர் காவல் நிலையம்


இந்நிலையில் இன்று, வழக்கம் போல் இவர்கள் இருவரும் காவலர்கள் சீருடை அணிந்து பணிக்கு வந்திருந்தனர். அங்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷஷாங் சாய் உத்தரவின் பெயரில் கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் முகேஷ் ஜெயக்குமார் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் முன்னிலையில் இவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது.

அம்மா உணவகம் சூறை; திமுகவின் ஆட்டம் தொடங்கியது!

அதன் அடிப்படையில் கரூர் நகர காவல் நிலைய வராண்டாவில் நளினி மற்றும் ராஜேந்திரன் பெயர் எழுதப்பட்ட கேக் வாங்கி வரப்பட்டு, பணியில் இருந்த காவலர்கள் கேக் வெட்டியும், கேக் ஊட்டி விட்டும், பொன்னாடை போர்த்தியும், வாழ்த்து அட்டைகள் வழங்கியும் கொண்டாடினர்.

மேலும், அவர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் பிறந்த நாளை கொண்டாட ஏதுவாக இன்று ஒரு நாள் விடுமுறை கொடுத்து அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் காவல் நிலையத்தில் பணியாற்றும் சக காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆவணங்களுடன் பறக்கும் லாரிகள்; தலைமைச் செயலகத்தில் பரபரப்பு!

மேலும், நேற்று பிறந்த நாள் கொண்டாடிய தலைமை காவலர்களான வேங்கடலட்சுமி, தமிழ்செல்வி ஆகியோருக்கும் பிறந்த நாள் வாழ்த்து மடல் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

அடுத்த செய்தி