ஆப்நகரம்

மாமனாரை கண்ட மருமகன்; துக்க வீட்டிலேயே....

கரூரில் மாமனாரை கண்ட மருமகன் துக்க வீடு என்றுகூட பார்க்காமல் நடந்துகொண்டதை பார்த்து பலரும் அதிருப்தி அடைந்தனர்.

Samayam Tamil 21 Apr 2021, 1:03 pm
கரூர் லாலாபேட்டை அருகே உள்ள பிள்ளாபாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல்பிள்ளை (60). இவருக்கும், குளித்தலை அருகே உள்ள கருங்கலாப்பள்ளியை சேர்ந்த இவரது மருமகன் செந்தில்குமார் (41) என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
Samayam Tamil கைது செய்யப்பட்டதை விளக்கும் படம்
மருமகன் கைது


4 நாளில் ஒரே வீட்டில் 4 மரணம்!

இந்நிலையில் நேற்று கருங்கலாப்பள்ளியில் செந்தில்குமாரின் பெரியப்பா இறந்துள்ளார். இதனால் தங்கவேல்பிள்ளை துக்கம் விசாரிப்பதற்காக அங்கு சென்றுள்ளார். இதை பார்த்த செந்தில்குமார் துக்க வீடு என்றுகூட பார்க்காமல் தங்கவேல்பிள்ளையை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

சாக்கு மூட்டையில் இளம்பெண் சடலம்; அதுக்குள்ள அடுத்த பஞ்சாயத்தா?

இதுகுறித்து தங்கவேல்பிள்ளை கொடுத்த புகாரின்பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து செந்தில்குமாரை அதிரடியாக கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி