ஆப்நகரம்

பிரியாணி வாங்கி தர்றோம் வாங்க: மாவட்ட நிர்வாகத்துக்கு மக்கள் அழைப்பு!

தரமற்ற முறையில் கழிவுநீர் வடிகால்கள் கட்டப்பட்டுள்ளதாக கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

Authored bySM Prabu | Samayam Tamil 5 Dec 2022, 6:37 pm
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி 5ஆவது வார்டு பகுதியில் தரமற்ற முறையில் சாலை, வடிகால்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், பணி முடிவதற்குள் வடிகால் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Samayam Tamil கழிவுநீர் வடிகால்கள்
கழிவுநீர் வடிகால்கள்


கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி 5ஆவது வார்டு மஞ்சமேடு, மணி நகர் பகுதியில் கலைஞரின் நகர்புறம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 50 லட்சம் மதிப்பில் கழிவு நீர் வடிகால் வசதியுடன் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பணிகள் கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் பணிகள் மிகவும் மந்தமான நிலையிலேயே நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் அங்கு கட்டப்பட்டுள்ள கழிவு நீர் வடிகால்களின் பக்கவாட்டு சுவர்கள் தரமற்ற முறையில் கட்டப்பட்டு வருவதால், ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டும், இடிந்தும் விழுந்துள்ளது.

அப்பகுதியில் கட்டப்பட்ட கழிவுநீர் வடிகாலின் பக்கவாட்டு சுவர் தற்போது பெய்த மழையாலும், பக்கவாட்டு சுவர் கம்பிகள் இன்றி கட்டப்பட்டதாலும் உடைந்து விழுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், கழிவு நீர் பாதை செல்லும் வழியில் உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்காமல், மின் கம்பங்களுக்கு குறுக்கே கழிவுநீர் செல்வதற்கு வழியின்றி வடிகால் கட்டியுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

அய்யர்மலை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோயில்: நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!
கழிவு நீர் வடிகால் பாதை அமைக்கும்போதே ஒப்பந்ததாரிடம் தரமற்ற முறையில் கட்டி வருவதாக சுட்டிக்காட்டி கேட்டால், உடனே ஒப்பந்ததாரர் பணியினை நிறுத்தி கிடப்பில் போட்டதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பணிகள் ஆரம்பித்து பத்து மாதங்களுக்கு மேலாகியும் முடிவடையாததால், தற்போது பெய்து வரும் மழையினால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அதிகமாக இருப்பதால் இப்பகுதி மக்கள் பெரும் அவதிகுள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து பல்வேறு புகார்களை தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், தாங்கள் சொல்வது தவறு என்றால் மாவட்ட நிர்வாகம் நேரில் வந்து எங்களுடன் இரண்டு நாள் தங்கி இருந்து பார்க்கட்டும். அவர்களுக்கு மூன்று வேலை பிரியாணியுடன் உணவு வழங்குகிறோம் எனவும் அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

தரமற்ற முறையில் கட்டப்பட்ட கழிவுநீர் வடிகால்கள் அகற்றிவிட்டு, மீண்டும் புதிதாக தரமானதாக கட்டித் தர வேண்டுமெனவும் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசிற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
SM Prabu
நான் மணிகண்ட பிரபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை, எழுத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பயணித்து வருகிறேன். அரசியல், நீதிமன்றம், அரசு சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். செய்திகளை தாண்டி அதன் பின்புலங்களை ஆராய்ந்து கட்டுரைகளாக தந்து வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் எவ்வித சமரசமும் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி