ஆப்நகரம்

வந்த வேகத்தில் கலெக்டர் அதிரடி; ஆடிப்போய் கிடக்கும் அதிகாரிகள்!

கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து அவர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். கரூர் புதிய கலெக்டரின் இந்த நடவடிக்கையை பொதுமக்களை பெரிதும் வரவேற்றுள்ளனர்.

Samayam Tamil 17 Jun 2021, 2:47 pm
கரூர் மாவட்ட புதிய ஆட்சியராக பிரபு சங்கர் ஐஏஎஸ் நேற்று காலை பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
Samayam Tamil கொரோனா கவச உடையில் கலெக்டர் பிரபு சங்கர்
கொரோனா கவச உடையில் கலெக்டர் பிரபு சங்கர்


அப்போது கவச உடையுடன் சென்று கொரோனா பாதித்த நோயாளிகள் குறைகளை கேட்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதன் தொடர்ச்சியாக, இன்று 2வது நாளாக கரூரில் உள்ள நியாய விலை கடைகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டார்.

அப்போது பொருட்கள் வாங்கியவர்கள், பொருட்கள் வாங்க காத்திருந்தவர்களிடம் டோக்கன் பெறுவதில் சிரமங்கள் இருக்கின்றதா? பொருட்கள் விநியோகம் சரியாக செய்கிறார்களா? என்பதையும் கலெக்டர் கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து கரூர் நகரில் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி முகாம் நடைபெறும் மையத்தினை ஆய்வு செய்தார். அங்கு பணியில் இருந்த மருத்துவர்களிடம் தடுப்பூசி எவ்வாறு செலுத்தப்படுகிறது? என்பது குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார்.

குள்ளநரி சசிகலாவை ஓடஓட விரட்டுவோம்; பரபரப்பு தீர்மானம் நிறைவேற்றிய அதிமுக!

அப்போது கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:

நியாய விலை கடைகளில் 14 வகையான மளிகை பொருட்கள் சரியாக வழங்கப்படவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தவறுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கரூர் மாவட்ட புதிய கலெக்டர் பிரபு சங்கர் அடுத்தடுத்து மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் அதே சமயம் புதிய கலெக்டரின் அதிரடி நடவடிக்கைகளால் அதிகாரிகள் ஆடிப்போய் உள்ளனர்.

அடுத்த செய்தி