ஆப்நகரம்

அலப்பறை, அட்டகாசம் என ரகளை செய்யும் கஞ்சா இளைஞர்கள் - பொதுமக்கள் பீதி

இரவு நேரங்களில் கஞ்சா போதையுடன் இளைஞர்கள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

Samayam Tamil 23 Mar 2022, 3:57 pm
கரூர் மாவட்டம் கரூர் மாநகரப் பேருந்து நிலையம் அருகே சில வாலிபர்கள் நாளுக்கு நாள் கஞ்சா போதையுடன் சுற்றித் திரிகின்றனர். அதுமட்டுமின்றி அடிதடி, ரகளை மற்றும் பெண்களை கேலி செய்வது உள்ளிட்ட பல குற்றச் செயல்களையும் செய்து வருகின்றனர்.
Samayam Tamil WhatsApp Image 2022-03-23 at 3.52.34 PM.


இந்த நிலையில் கரூர் பேருந்து நிலையம் பேருந்துகள் உள்ளே நுழையும் நுழைவாயில் 1 மற்றும் 2 ஆகியவற்றிற்கு முன் இளைஞர் ஒருவர் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அந்த வாலிபரை பொதுமக்கள் மற்றும் அப்பகுதி வியாபாரிகள் தட்டிக் கேட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அதிகமானதால் பரபரப்பு நீடித்தது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட பின்னர் புறக்காவல் நிலைய காவலர் விசாரணையில் ஈடுபட்டு அந்த வாலிபரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

மதுபானகடை வாயிலிலும் கோவில் அருகேயும் கஞ்சா போதையுடன் சுற்றித் திரியும் இளைஞர்கள் அதிகரித்து வருவதால் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி