ஆப்நகரம்

கரூர் மாணவி பாலியல் தற்கொலை, புகார் கொடுத்தவரை தாக்கிய போலீஸ்: ஜோதிமணி ஆவேசம்!

கரூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் எம்பி ஜோதிமணி பேட்டி அளித்து உள்ளார்.

Samayam Tamil 22 Nov 2021, 1:08 pm
கரூர் மாநகராட்சி வெங்கமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், தனியார் பள்ளி மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உயிரிழந்த மாணவியின் வீட்டிற்கு வருகை தந்து மாணவியின் தாய் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
Samayam Tamil கரூர் மாணவி பாலியல் தற்கொலை, புகார் கொடுத்தவரை தாக்கிய போலீஸ்: ஜோதிமணி ஆவேசம்!


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி கூறியதாவது:
தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் புகார் அளிக்கச் சென்ற போது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை காவல் நிலையத்தில் காத்திருக்க வைத்து உள்ளனர். உடன் சென்ற அவரது உறவினர்களை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணதாசன் தாக்கி உள்ளார். அவரை காத்திருப்பு பட்டியல் வைத்திருப்பதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

கரூர் மாணவி சாக காரணம் யார்? கதறிய பெற்றோருக்கு மத்தியில் பிரேதம் ஒப்படைப்பு..!
மாணவி தற்கொலை விவகாரத்தில் தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விசாகா கமிட்டி அமைக்க வேண்டும்.

அதேபோல் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். மாவட்ட அளவில் மன நல ஆலோசகர்கள் நியமனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி