ஆப்நகரம்

கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி பிரதோஷ வழிபாடு!

கரூர் அருள்மிகு ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி பிரதோஷ நிகழ்ச்சியினை முன்னிட்டு தேய்பிறை பிரதோஷ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

Samayam Tamil 28 May 2022, 8:04 am
தமிழ்நாட்டில் உள்ள சிவ ஆலயங்களில் மிகவும் தொன்மை வாய்ந்ததும், புராதானமிக்கதுமான கரூர் ஆநிலையப்பர் என்றழைக்கப்படும் கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவள்ளி, அருள்மிகு ஸ்ரீ செளந்தரநாயகி உடனுறையாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத தேய்பிறை பிரதோஷ நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
Samayam Tamil karur pasupatheeswarar temple


பிரதோஷத்தை முன்னிட்டு பிரதோஷ நாயனாரை ரிஷப வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் பல வண்ண பூக்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, பிரதோஷ நாயனார், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் கோயிலின் உட்பிரகாரத்தில் உலா வந்தார்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான முழு ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

அடுத்த செய்தி