ஆப்நகரம்

ஏவ வேலுவை குறி வைத்து கரூர் ஐடி ரெய்டு?: இன்றும் தொடர்கிறது!

கரூரில் நிதி நிறுவனங்கள், ஜவுளி துணி ஏற்றுமதி நிறுவனங்கள் என 6 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக உள்ளே புகுந்து சோதனை செய்து வருகின்றனர்.

Samayam Tamil 26 Mar 2021, 7:27 am
கரூர் நகரில் வடக்கு பிரதட்சணம் சாலை, சேலம் பை-பாஸ் சாலையில் உள்ள ஜவுளி துணி ஏற்றுமதி நிறுவனங்கள் ஆகிய இடங்களில் நேற்று மதியம் முதல் சோதனையைத் தொடங்கினர்.
Samayam Tamil ஏவ வேலுவை குறி வைத்து கரூர் ஐடி ரெய்டு?: இன்றும் தொடர்கிறது!


இந்த சோதனை தொடங்கப்பட்ட அதே வேளை எம்ஜி சாலை, 80 அடிச் சாலை, திரு.வி.கா சாலையில் உள்ள நிதி நிறுவன உரிமையாளர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை, கோவை, மதுரை, சேலம், ஈரோடு மாவட்டங்களைச் சார்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 7 குழுக்களாகப் பிரிந்து மதியம் முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடிகை நமீதா பிரச்சாரம் !!!

இந்த அதிரடி நடவடிக்கையின்போது, பாதுகாப்பிற்காக போலீசார் அனைத்து இடங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த சோதனை இன்றும் தொடரும் என அதிகாரிகள் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவை குறி வைத்து இப்போது இந்த வருமான வரித்துறை சோதனை முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்