சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்:
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மிகவும் பழமை வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி எம்பெருமானுக்கு என்னை காப்பு சாற்றி பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், சந்தனம், பன்னீர், விபூதி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெள்ளி கவசம் அணிவித்து பிறகு பொதுமக்கள் வழங்கிய நறுமணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, நந்திக்கு சிறப்பு தீபாராதனைகள் கற்பூர ஆரத்தி, கும்ப ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி, மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.
திரளான பக்தர்கள் சாமி தரிசனம்:
கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பிரதோஷ விழாவை காண கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
சித்தர் கருவூரார் அவதாரத் திருநாளை முன்னிட்டு திருத்தேர் பவனி விழா:
முன்னதாக நேற்று கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சித்தர் கருவூரார் அவதாரத் திருநாளை முன்னிட்டு திருத்தேர் பவனி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
புகழ்பெற்ற கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சித்தர் கருவூரார் சன்னதி தனியாக உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் சித்தர் கருவூரார் அவதார திருநாளானது ஆலயத்தின் சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று கருவூரார் சித்தருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கருவூராருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சைச் சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று, அதைத்தொடர்ந்து கருவூரார் சித்தருக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து, பஞ்ச கற்பூர ஆரத்தி உடன் மகாதீபாராதனை காட்டப்பட்டது.
ஆசிய அளவிலான தடகள போட்டி: கோவை பள்ளி மாணவர் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பு!
அதனைத் தொடர்ந்து இரவு தேர்பவனி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த தேர்பவனி விழாவை முன்னிட்டு திருத்தேரில் உற்சவர் கருவூரார் கொலுவிருக்க செய்தனர். வண்ண மாலைகள் அணிவித்து, மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட பிறகு மேளதாளங்கள் முழங்க ஆலயத்திலிருந்து மகா தீபாராதனை நடைபெற்ற பிறகு திருத்தேர் பவனி விழா துவங்கியது.
ஆலயத்தை சுற்றி திருத்தேர் திருவீதி உலா வந்த பிறகு மீண்டும் ஆலய மண்டபத்திற்கு வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சித்தர் கருவூராரை தரிசனம் செய்தனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மிகவும் பழமை வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி எம்பெருமானுக்கு என்னை காப்பு சாற்றி பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், சந்தனம், பன்னீர், விபூதி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெள்ளி கவசம் அணிவித்து பிறகு பொதுமக்கள் வழங்கிய நறுமணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, நந்திக்கு சிறப்பு தீபாராதனைகள் கற்பூர ஆரத்தி, கும்ப ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி, மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.
திரளான பக்தர்கள் சாமி தரிசனம்:
கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பிரதோஷ விழாவை காண கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
சித்தர் கருவூரார் அவதாரத் திருநாளை முன்னிட்டு திருத்தேர் பவனி விழா:
முன்னதாக நேற்று கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சித்தர் கருவூரார் அவதாரத் திருநாளை முன்னிட்டு திருத்தேர் பவனி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
புகழ்பெற்ற கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சித்தர் கருவூரார் சன்னதி தனியாக உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் சித்தர் கருவூரார் அவதார திருநாளானது ஆலயத்தின் சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று கருவூரார் சித்தருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கருவூராருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சைச் சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று, அதைத்தொடர்ந்து கருவூரார் சித்தருக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து, பஞ்ச கற்பூர ஆரத்தி உடன் மகாதீபாராதனை காட்டப்பட்டது.
ஆசிய அளவிலான தடகள போட்டி: கோவை பள்ளி மாணவர் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பு!
அதனைத் தொடர்ந்து இரவு தேர்பவனி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த தேர்பவனி விழாவை முன்னிட்டு திருத்தேரில் உற்சவர் கருவூரார் கொலுவிருக்க செய்தனர். வண்ண மாலைகள் அணிவித்து, மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட பிறகு மேளதாளங்கள் முழங்க ஆலயத்திலிருந்து மகா தீபாராதனை நடைபெற்ற பிறகு திருத்தேர் பவனி விழா துவங்கியது.
ஆலயத்தை சுற்றி திருத்தேர் திருவீதி உலா வந்த பிறகு மீண்டும் ஆலய மண்டபத்திற்கு வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சித்தர் கருவூராரை தரிசனம் செய்தனர்.