ஆப்நகரம்

இந்த கடைக்கு இம்புட்டு அபராதமா?; என்ன சார் சொல்றீங்க...

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனி பகுதியில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் செயல்பட்ட மளிகை கடைக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோன்று விதி மீறலில் ஈடுபட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்.

Samayam Tamil 8 Jun 2021, 4:56 pm
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனி பகுதியில் மளிகை கடை ஒன்று அரசு விதிமுறைகள் படி சமூக இடைவெளியை பின்பற்றாமல் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது.
Samayam Tamil நாமக்கல் நகராட்சி அலுவலகம்
நாமக்கல் நகராட்சி அலுவலகம்


மேலும் அந்த கடையில் முகக்கவசம் அணியாமல் மக்கள் கூட்டம் கூட்டமாக இருந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து திருச்செங்கோடு நகராட்சி அதிகாரிகள் குறிப்பிட்ட மளிகை கடைக்கு விரைந்து வந்தனர். அப்போது அந்த கடையின் உரிமையாளர் கொரோனா விதிகளை பின்பற்றாமல் வியாபாரத்தில் ஈடுபட்டது உறுதியானது.

நூலகங்களில்'முரசொலி'நாளிதழ் வாங்க நிர்பந்தம்; முன்னாள் ஊராட்சி தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு!

இதனை தொடர்ந்து அந்த கடைக்கு 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து விதி மீறலில் ஈடுபட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

அடுத்த செய்தி