ஆப்நகரம்

கரூர் வந்த ஒற்றுமை தீப சுடரொளி மாரத்தான் ஓட்டம்: உற்சாக வரவேற்பு!

ஒற்றுமை தீப சுடரொளி மாரத்தான் ஓட்டம் கரூர் மாவட்டம் வந்தடைந்தது

Authored bySM Prabu | Samayam Tamil 27 Nov 2022, 12:04 pm
கன்னியாகுமரி முதல் டெல்லி வரை செல்லும் ஒற்றுமை தீப சுடரொளி மாரத்தான் ஓட்டம் கரூர் மாவட்டம் வந்தடைந்தது. பள்ளி, கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் திருச்சி பட்டாலியன் குருப் கமாண்டர் குழுவினர் அதனை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
Samayam Tamil ஒற்றுமை தீப சுடரொளி மாரத்தான் ஓட்டம்
ஒற்றுமை தீப சுடரொளி மாரத்தான் ஓட்டம்


தேசிய மாணவர் படை இயக்கம் தோன்றி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, கன்னியாகுமரி முதல் டெல்லி வரை ஒற்றுமை தீப சுடரொளி மாராத்தான் ஓட்டம் கன்னியாகுமரி முதல் டெல்லி வரை நடைபெறுகிறது.

கன்னியாகுமரியில் நவம்பர் 20 ஆம் தேதியன்று துவங்கிய ஒற்றுமை தீப சுடரொளி மாராத்தான் ஓட்டம், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் வழியாக கரூர் மாவட்ட எல்லையான ஆண்டிப்பட்டி கோட்டை டோல்கேட்டிற்கு வந்தடைந்தது. கர்னல் கே.எஸ். பத்வார் SM 90 UP பட்டாலியன் என்சிசி, கர்னல் டி.எஸ் மாவிக், கர்னல் ஏ.என்.ஷா ஆகியோர் அடங்கிய மாரத்தான் குழு தினமும் 50 கிலோமீட்டர் தூரம் ஓடி வருகின்றனர்.

இவர்களுக்கு திருச்சிராப்பள்ளி 2 பட்டாலியன் குருப் கமாண்டர் கர்னல் சுனில் புத், கமாண்டிங் ஆபிசர் கர்னல் கோ சுவாமி மற்றும் லெப்ட்டினன்ட் கர்னல் அருண்குமார், சுபேதார் மேஜர் மாரிமுத்து ஆகியோர் கரூரில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


இந்நிகழ்வில் பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அ. முகமது இஸ்மாயில் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் தாஜுதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் நாகூர் மீரான் மற்றும் கரூர் அரசு கலை அறிவியல் கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் விநாயகர் ஒருங்கிணைத்தனர்.

இம்மாரத்தான் ஓட்டத்தில் பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மற்றும் கரூர் அரசு கலை அறிவியல் கல்லூரி, கொங்கு கலை அறிவியல் கல்லூரியை சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவர்களும் கலந்து கொண்டனர்.
எழுத்தாளர் பற்றி
SM Prabu
நான் மணிகண்ட பிரபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை, எழுத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பயணித்து வருகிறேன். அரசியல், நீதிமன்றம், அரசு சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். செய்திகளை தாண்டி அதன் பின்புலங்களை ஆராய்ந்து கட்டுரைகளாக தந்து வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் எவ்வித சமரசமும் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி