ஆப்நகரம்

வீரணம்பட்டி கோவிலுக்கு சீல் வைத்த விவகாரம்; தோல்வியில் முடிந்த கலெக்டர் முயற்சி.. போலீஸ் குவிப்பு!

கரூர் வீரணம்பட்டி கோவிலுக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு எட்டாததால், கிராம மக்கள் தொடர்ந்து எட்டு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 10 Jun 2023, 4:18 pm

ஹைலைட்ஸ்:

  • வீரணம்பட்டியில் காளியம்மன் கோவில் திருவிழாவில் பட்டியல் இன இளைஞரை கோவிலுக்குள் விடாமல் தடுத்த விவகாரம்
  • கோவிலுக்கு சீல் வைத்து உத்தரவிட்ட கோட்டாட்சியர்
  • எட்டு மணி நேரமாக போராட்டம் நடத்திய கிராம மக்கள்
  • கலெக்டருடன் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil போலீஸ் குவிப்பு
வீரணம்பட்டி கோவிலுக்கு சீல் வைத்த விவகாரத்தில் போலீஸ் குவிப்பு
வீரணம்பட்டி கோவிலுக்கு சீல் வைத்த விவகாரம்:

கடவூர் அருகே வீரணம்பட்டியில் காளியம்மன் கோவில் திருவிழாவில் பட்டியல் இன இளைஞரை கோவிலுக்குள் விடாமல் தடுத்த சம்பவத்தில் கோவிலுக்கு கோட்டாட்சியர் தலைமையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதில் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்ட வருவாய்த்துறையை கண்டித்தும், அதிவேகமாகச் சென்ற கோட்டாட்சியர் கார் சிறுமி மீது மோதியதை கண்டித்தும் கடையடைப்பு மற்றும் 8 மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்ட ஆட்சியர் உடன் பேச்சுவார்த்தை உடன்படாத நிலையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம், கடவூர் அருகே வீரணம்பட்டியில் காளியம்மன் கோவிலை திருவிழாவில் பட்டியல் என இளைஞரை கோவிலுக்குள் அனுமதிக்காமல் தடுத்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நேற்று கோட்டாட்சியர் தலைமையில் கோவிலை பூட்டி சீல் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், கடையடைப்பு, திருச்சி - பாளையம் சாலையில் சாலை மறியல், மரங்கள் மற்றும் சிமெண்ட் தூண்களை சாலையில் போட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நேற்று முன்தினம் கோட்டாட்சியர் புஷ்பாதேவி சரிவர விசாரணை மேற்கொள்ளாமல் ஒருதலை பட்சமாக செயல்பட்டதாகவும், அவரது வாகனம் மோதி 17 வயது சிறுமி பவதாரணி படுகாயம் அடைந்தததை கண்டுகொள்ளாமல் சென்றதை கண்டித்தும் சாலை மறியல் போராட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 5 மணி நேரமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள், 8 ஊர் கிராம மக்கள் ஆங்காங்கே சாலை மறியல், சாலைகளில் கற்கள், முற்களை, மரங்களை போட்டும், சாலையில் காலி பீர் பாட்டில்களை வைத்தும் சாலை மறித்தனர்.

தோல்வியில் முடிந்த கலெக்டர் முயற்சி:

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக வீரணம்பட்டியில் உள்ள கோவிலுக்கு பாத்தியப்பட்ட எட்டு ஊர் கிராமத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களை மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அழைத்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எட்டு ஊரை சேர்ந்த முக்கியஸ்தர்கள் நான்கு கார்களில் மாவட்ட ஆட்சியரை சந்திக்க கரூர் சென்றனர்.

மாவட்ட ஆட்சியர் உடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என தெரிகிறது. இந்நிலையில் மாலையில் வீரணம்பட்டி பகுதியில் அதிவிரைவு படை மற்றும் காவல் துறையினர் என 300க்கு மேற்பட்டவர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை ஆன்மீக சுற்றுலா பயணிகளுக்கு குஜராத்தில் சோகம்; ஓடும் பேருந்தில் பயங்கரம்..!

போராட்டங்கள் குறித்து பொதுமக்கள் புரிந்து கொண்டு போராட்டத்தை அவர்களாகவே கலைந்து சென்றனர். இருந்தாலும் தற்போதும் காவல்துறையினர் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.

நேற்று கோட்டாட்சியர் பேச்சுவார்த்தையில் அவரது வாகனத்தை முற்றுகையிட்டு மற்றும் குடிபோதையில் கல்லை எரிந்ததாகவும், அவரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் பெயர் தெரிந்த 20 பேர் மற்றும் 100க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தொலைபேசி வாயிலாக தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி