ஆப்நகரம்

Karur Mayanur Dam: கரூரில் காவிரி நீர் வரத்து அதிகரிப்பு: அணைகளில் மீன் வியாபாரம் படு தூள்!

Cauvery Water: கர்நாடக மாநிலத்தில் பெய்த கன மழை காரணமாகக் கரூர் அருகே காவிரியில் கட்டப்பட்டுள்ள அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள், மீன் பிடி தொழிலாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Samayam Tamil 3 Aug 2021, 10:01 am
கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்குத் தண்ணீர் வரத்து, 15 ஆயிரம் கன அடியைத் தாண்டியது. இதனால் அணைப்பகுதிகளில், மீன் வியாபாரம் களை கட்டியுள்ளது. தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா பாசனப் பகுதிகளுக்குக் கடந்த ஜூன், 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்காகத் தண்ணீர் திறக்கப்பட்டது.
Samayam Tamil கரூரில் காவிரி நீர் வரத்து அதிகரிப்பு: அணைகளில் மீன் வியாபாரம் படு தூள்!


வினாடிக்கு, 3 ஆயிரம் கன அடி முதல் அதிகபட்சமாக, 15 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. அதேவேளை, கர்நாடகா மாநில அணைகளிலிருந்து, எதிர்பார்த்த அளவில் தண்ணீர் திறக்கப்படாததால், மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனப் பகுதிகளுக்குத் திறக்கப்பட்ட, தண்ணீரின் அளவும் படிப்படியாகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு, 14 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர், அமராவதி அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரும், காவிரியாற்றில் சேர்ந்து, கரூர் மாயனூர் கதவணைக்கு வந்து சேர்கிறது. நேற்று காலை, 6 மணி நிலவரப்படி மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, 15 ஆயிரத்து, 74 கன அடி தண்ணீர் வந்தது. டெல்டா பாசனப் பகுதிக்குக் குறுவை சாகுபடிக்காக, காவிரியாற்றில், 14 ஆயிரத்து, 454 கன அடி தண்ணீரும், மூன்று கிளை வாய்க்காலில், 620 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
கரூர் கலெக்டர் ஆபீசில் அடுத்தடுத்து 3 பெண்கள் தற்கொலை முயற்சி: என்ன காரணம்?
காவிரி பாசனப் பகுதிகளில் இம்மாதம், சம்பா சாகுபடி துவங்க உள்ள நிலையில், மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, 15 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வரத்து உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். மாயனூர் கதவணைக்கு, 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வரும் நிலையில், மீன்பிடி தொழில் விறுவிறுப்பாகி உள்ளது.

கரூர், நாமக்கல், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், மீன் வாங்க மாயனூர் கதவணை பகுதியில் குவிந்தனர். பல்வேறு ரக மீன்கள் கிலோ, நூறு ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஏராளமான, பொதுமக்கள் மீன்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

அடுத்த செய்தி