ஆப்நகரம்

ஆயுள் தண்டனை கைதி தற்கொலை; உருக்கமாக எழுதிய கடிதம் சிக்கியது!

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, ஜாமீனில் வெளியே வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 3 Aug 2021, 1:28 pm
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா, தளி அடுத்த பாளையங்கோட்டையை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் வீரேந்திரன். விவசாயி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்ததாக தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Samayam Tamil வீரேந்திரன்
வீரேந்திரன்


இந்த வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி மகிளா நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து ஐகோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார். ஆனால் இந்த தண்டனையை ஐகோர்ட்டும் உறுதி செய்தது.

இதனால் வீரேந்திரன் மனவேதனையில் இருந்து வந்தார். மேலும் அவர் பலாத்கார வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இதனிடையே இவருக்கும், உறவினர்களுக்கும் சொத்துகள் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாகவும் விரக்தியில் இருந்த வீரேந்திரன் கடந்த ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் சொத்து பிரச்சினை காரணமாக வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர், வீட்டில் இன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று வீரேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தற்கொலை தொடர்பாக வீரேந்திரனின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீரேந்திரன் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அன்புள்ள அம்மா, 2 அக்கா, மாமா, மாமா மகள்களை நன்றாக பார்த்து கொள்ளவும். உங்களுக்கு எப்போதும் துணை இருப்பேன். இந்த சொத்தால் என் வாழ்க்கை உயிர் போச்சு. இவ்வாறு அதில் எழுதி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை; பாலியல் வழக்கில் மகிளா நீதிமன்றம் அதிரடி!

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தளி அருகே ஜாமீனில் வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி