ஆப்நகரம்

'தங்கக் கூடை புதையல்' ஓசூர் விவசாயி நரபலி.. கூட்டாளி சிக்கியது எப்படி?

ஓசூர் அருகே புதையல் எடுக்கும் விவகாரத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவத்தில் அவரது கூட்டாளியே நரபலியிட்டது போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Samayam Tamil 1 Oct 2022, 1:43 pm
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள புதூர் கிராமத்தில் லட்சுமணன் ( வயது 50) என்ற விவசாயி, கடந்த 29-ம் தேதி அவருக்கு சொந்தமான வெற்றிலை தோட்டத்திலேயே உயிரிழந்து கிடந்தார்.
Samayam Tamil Hosur Farmer Treasure death


புதையல் எடுக்கும் ஆசையில் நடத்தப்பட்ட பூஜையின் போது லட்சுமணன் உயிரிழந்ததாக தகவல் பரவியது. சம்பவம் குறித்து அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த கெலமங்கலம் போலீசார் லட்சுமணன் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன. லட்சுமணனின் கூட்டளியே அவரை அடித்துக்கொன்று நரபலி கொடுத்தது அம்பலமாகியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த முருங்கைமரதரிசு கிராமத்தை சேர்ந்த மணி ( வயது 65). அவர் லட்சுமணின் மகள் இருவரையும் இரண்டு நாட்கள் வெளியே தங்கியிருக்கும் படி கூறியுள்ளார்.

பின்னர், புதூர் கிராமத்தில் லட்சுமணன் வீட்டிற்கு எதிரே உள்ள வெற்றிலை தோட்டத்தில் கோழி பலியிட்டு பூஜைகளுடன் புதையலுக்காக 2 அடி குழித்தோண்டியபோது, லட்சுமணனுக்கு அருள் வந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது நரபலியிட்டால் மட்டுமே கூடை முழுவதும் உள்ள தங்கம் வெளியில் வரும் என்று கூறியதாக தெரிகிறது.
புதையல் எடுக்க பூஜை செய்தவர் பலி - ஓசூரில் நடந்தது என்ன?

இதனால் அதிர்ச்சியடைந்த மணி, அந்த இடத்தில் இருவரை தவிர வேறு யாரும் இல்லை என்பதால் தன்னை பலியாக கொலை செய்துவிடுவாரோ என பயந்த மணி அருகில் இருந்த மண்வெட்டியால் தலை, மார்பு பகுதியில் தாக்கியதில் மார்பு எழும்பு உடைந்து இதய பகுதியில் உள் காயம் ஏற்பட்டு லட்சுமணன் உயிரிழந்துள்ளார்.

அப்போதும் தங்கக் கூடை வெளியே வராததால் யாருக்கும் சந்தேகம் வராதவாறு லட்சுமணனை குழியில் போட்டு முடிவிட்டு மணி பென்னாகரம் பகுதிக்கு சென்று தலைமறைவாகியுள்ளார். உடற்கூராய்வு அறிக்கையின் படி சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்திய பிறகு மணியை தேடி பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி