ஆப்நகரம்

அணையில் நீர் திறப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக ஆட்சியர் ஜெயச்சந்திரன் பானுரெட்டி தண்ணீர் திறந்து வைத்தார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Samayam Tamil 29 Jul 2021, 5:03 pm
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜெயச்சந்திரன் பானு ரெட்டி, ஒசூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஒய்.பிரகாஷ் கதவணை வழியாக தண்ணீர் திறந்து வைத்தனர்.
Samayam Tamil கெலவரப்பள்ளி அணை திறக்கப்படுகிறது
கெலவரப்பள்ளி அணை திறக்கப்படுகிறது


கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் கெலவரப்பள்ளி, தொரப்பள்ளி, உத்தனப்பள்ளி உள்ளிட்ட 100 கிராமங்ளுக்கு உட்பட்ட 8,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதன் மூலம் விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

2500 ஆண்டு கல்பதுக்கைகள்; மயிலாடும்பாறை விநோதம்!

கெலவரப்பள்ளி அணையின் கதவணை மலர்தூவி திறந்து வைத்த ஆட்சியர் ஜெயச்சந்திரன் பானு ரெட்டி, சட்டப்பேரவை உறுப்பினர் ஒய். பிரகாஷ், ஒன்றிய செயலாளர், பொதுப்பணி துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி