ஆப்நகரம்

ஊராட்சி மன்ற தலைவர் அடித்துக்கொலை - தளி தொகுதியில் பரபரப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஊராட்சி மன்ற தலைவரை அடையாளம் தெரியாத நபர்கள் உருட்டுக் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 3 Aug 2022, 10:19 am
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தளி சட்டமன்ற தொகுதி தாரவேந்திரம் (தனி) ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தவர் நரசிம்மமூர்த்தி(42) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகியாகவும் இருந்தார்.
Samayam Tamil Hosur Village president murder


இவர் நேற்று, தளியிலிருந்து வீட்டிற்கு காய்கறிகளை வாங்கிக்கொண்டு தனது ஊரான பி.பி.பாளையத்திற்கு சென்றபோது கிராமத்திற்கு அருகாமையில் மாந்தோப்பு பகுதியில் மறைந்திருந்த மர்மநபர்கள் உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.

இரத்த வெள்ளத்தில் சரிந்த நரசிம்மமூர்த்தியை அப்பகுதியினர் பார்த்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் நரசிம்மமூர்த்தி அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தென்பெண்ணை ஆற்றில் துர்நாற்றம், நுரை.. கிருஷ்ணகிரி விவசாயிகள் அச்சம்!

மேலும், மாவட்ட எஸ்பி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலிசார் குவிக்கப்பட்டிருப்பதால் பதற்றமான சூழல் ஏற்ப்பட்டுள்ளது. தேர்தல் முன் பகையால் கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலிசார் விசாரித்து வருகின்றனர். தளி தொகுதியில் சிபிஐ, திமுக ஒரே கூட்டணி என்றாலும் நேர் பலம் வாய்ந்த இரு துருவங்களாகவே செயல்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

அடுத்த செய்தி