ஆப்நகரம்

150 அடி ஆழ கிணற்றில் விழுந்த புள்ளிமான்கள்!

கிருஷ்ணகிரி அருகே 150 அடி ஆழ கிணற்றில் விழுந்த நான்கு புள்ளிமான்களை தீயணைப்புத்துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

Samayam Tamil 12 Oct 2021, 3:52 pm

ஹைலைட்ஸ்:

  • 150 அடி ஆழ கிணற்றில் விழுந்த புள்ளிமான்கள்
  • வனத்துறை, தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டனர்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
கிருஷ்ணகிரி மாவட்டம் நிலப்பரப்பை பொறுத்தவரையில் அதிக வனப்பகுதிகளை கொண்டது. வனப்பகுதியில் யானை, புள்ளிமான், காட்டுப்பன்றி, சிறுத்தை, சிங்கம் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வாழ்கின்றனர். குறிப்பாக இரைத்தேடி யானை, புள்ளிமான் ஆகியவை குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வாடிக்கையாக உள்ளது.
யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வரும்போது விவசாய நிலங்களில் பயிர்கல் மற்றும் குடியிருப்புகளை சேதப்படுத்துவதாக வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதி மக்கள் தொடர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தொகரப்பள்ளி வனப்பகுதிக்கு உட்பட்ட சீனிவாசபுரம் கிராமத்தில் உள்ள ராமசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இரைத்தேடி சென்ற 4 புள்ளிமான்கள் 150 அடி ஆழ கிணற்றில் விழுந்தது. தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்து படுகாயமடைந்த மான்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் கவனமாக இருங்க!

பின்னர், நிகழ்விடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் வனத்துறை வீரர்கள் கிணற்றில் இறங்கி 4 மான்களை கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர். காயமடைந்த மான்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் தொகரப்பள்ளி காப்புக்காட்டில் பத்திரமாக விடப்பட்டது.

அடுத்த செய்தி