ஆப்நகரம்

ஏப்.30-ஆம் தேதி 1500 தடுப்பூசி முகாம் - கிருஷ்ணகிரி ஆட்சியர் அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள 1,500 தடுப்பூசி முகாம்களில் அதில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 4.5 லட்சம் பேர் பயன்படுத்திக்கொள்ள ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Samayam Tamil 27 Apr 2022, 5:49 pm
இதுகுறித்து கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
Samayam Tamil corona vaccine

"கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொதுமக்கள் அளித்த ஒத்துழைப்பாலும் பல்வேறு துறைகள் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலமாக கொரோனா அலைகளை பெரும் சேதம் இல்லாமல் சந்திக்க முடிந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரையில் தற்போது கொரோனா இல்லை என்றாலும் பல்வேறு நாடுகள் மற்றும் டெல்லி, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் புதிய தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கடந்த கொரோனா அலைகளை கட்டுப்படுத்த தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதமாக இருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடுப்பூசி செய்துகொள்ள 15 லட்சத்து 2 ஆயிரத்து 300 பேர் தகுதியான நபர்கள். இதில் 88 சதவீதம் பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 68% பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டும் கொரோனா தொற்று பரவாது. தொற்று ஏற்பட்டாலும் பெரிய அளவிலான பாதிப்புகள் இருக்காது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
சாம்சங் கேலக்ஸி M32 வெல்ல அட்டகாசமான வாய்ப்பு. இந்த படிவத்தை பூர்த்தி செய்து பல கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லுங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 333 கிராம பஞ்சாயத்து 6 நகர பஞ்சாயத்து ஒரு மாநகராட்சி ஒரு நகராட்சி ஆகிய பகுதிகளில் ஏப்ரல் 30(சனிக்கிழமை) 1500 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது அனைவரும் இந்த முகாம்களில் சென்று தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

மாணவர்களைப் பொறுத்தவரையில் 12 முதல் 14 வயது உடைய 86% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதி உள்ள மாணவர்களுக்கு பெற்றோர்கள் முன்வந்து தடுப்பூசியை செலுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும். அதேபோல் 15 வயது முதல் 18 வயதுடைய 90 சதவீத மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது.

பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு செல்லும் பொழுது கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் அதேபோல் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி