ஆப்நகரம்

காங்கிரஸ் எம்.பிக்கு திடீர் நெஞ்சுவலி; தனியார் மருத்துவமனையில் அனுமதி!

கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்.பி செல்லக்குமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து எம்.பி செல்லக்குமார் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 27 Jul 2021, 9:10 am
கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி செல்லக்குமார் (60). சென்னை, அண்ணா நகரில் வசித்து வருகிறார். வாரத்தில் இரண்டு நாட்கள் கிருஷ்ணகிரிக்கு வந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்பது வழக்கம்.
Samayam Tamil டாக்டர் செல்லக்குமார் எம்.பி
டாக்டர் செல்லக்குமார் எம்.பி


நேற்று முன்தினம் காலை செல்லக்குமார் கிருஷ்ணகிரிக்கு வருகை தந்து, தனது அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் இருந்து மனுக்களை வாங்கினார். இதன் பிறகு மாலை சென்னை புறப்பட்டார்.

இந்நிலையில் அன்று இரவு எம்.பி செல்லக்குமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. எனவே செல்லக்குமார் உடனே சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவர் நலமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இதனால் மருத்துவமனைக்கு ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வருகை தந்தபடி உள்ளனர்.

அடுத்த செய்தி