ஆப்நகரம்

கிருஷ்ணகிரியில் 110 காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 110 காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

Samayam Tamil 22 Sep 2022, 11:55 am
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்டவையால் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Samayam Tamil Krishnagiri district administration conducted 110 special fever camp
கோப்புப்படம்


இந்த நிலையில் மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள், ஒருங்கிணைந்த தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. போலுப்பள்ளி உண்டு உறைவிடப்பள்ளியில் நடந்த முகாமில், மாணவ-மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, மத்தூர், வேப்பனப்பள்ளி, சூளகிரி, ஓசூர், கெலமங்கலம், காவேரிப்பட்டணம், தளி ஆகிய 10 ஒன்றியங்களில் 110 இடங்களில் காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

அரசு பள்ளிகளில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, காய்ச்சல், சளி, இருமல், தலைவலி உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர், வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டன.

ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து, கிராம பகுதிகளில் ஒருங்கிணைந்த தூய்மை பணிகளும், கொசு மற்றும் கொசு புழுக்கள் ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பருவநிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் பாதிப்பு சிலருக்கு உள்ளது. காய்ச்சல், சளி, இருமல், தலைவலி பாதிப்பு உள்ளவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு சிகிச்சை பெறலாம்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஒவ்வொரு நாளும் மருத்துவ குழுவினர் 4 இடங்களில் முகாம் நடத்தி பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் 11 நடமாடும் மருத்துவ குழுவினரும், 20 குழந்தைகளுக்கான சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி