ஆப்நகரம்

கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் ஆழங்கட்டி மழை.. பயிர்கள் சேதம்.. இழப்பீடு கிடைக்குமா என விவசாயிகள் எதிர்பார்ப்பு..

பாகலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த ஆழங்கட்டி கனமழை காரணமாக கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தது. அதனை பயிரிட்ட விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

Curated byM.முகமது கெளஸ் | Samayam Tamil 23 May 2023, 7:27 pm

ஹைலைட்ஸ்:

  • கிருஷ்ணகிரி பாகலூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆலங்கட்டி மழை
  • கேரட், பீன்ஸ் தக்காளி, கொத்தமல்லி உள்ளிட்ட அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் சேதம்
  • பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயி கோரிக்கை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Krishnagiri vegetables crops spoil in rain
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக கோடை காலம் துவங்கி வெயில் பொதுமக்களை வாட்டி வந்தது. அதிலும் அக்னி நட்சத்திரம் துவங்கிய நாள் முதல் பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் ஆழங்கட்டி மழை பெய்துள்ளது. ஏற்கனவே அப்பகுதிகளில் சுமார் 150 ஏக்கருக்கும் மேலாக பீன்ஸ், கேரட், தக்காளி, கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

அன்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அவை அனைத்தும் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் நேற்று இரவு பி.முதுகானப்பள்ளி, , பட்டவாடப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆழங்கட்டி மழை பெய்ததால் அந்தப் பகுதியில் விவசாயிகள் பயிரிட்டு இருந்த காய்கறி பயிர்கள், பசுமை குடிகளில் உள்ள அங்கார பூக்கள் உள்ளிட்ட விலைபெயர்கள் சேதம் அடைந்தது.

இது குறித்து அப்பகுதி விவசாயி கூறுகையில், தங்கள் பகுதியில் பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலையே செய்து வருகின்றனர். இந்தப் பகுதி முழுவதும் விவசாயம் தான் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.



கொரோனா காலகட்டத்திற்கு பிறகு கடந்த ஒரு ஆண்டு காலமாக விவசாய பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். கொரோனாவிற்கு முன்பாகவே விவசாயத்திற்காக வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலையில் அந்த கடனை அடைக்க மேலும் கடன் வாங்கி பீன்ஸ், கேரட், கொத்தமல்லி, தக்காளி போன்ற பயிர்களை சாகுபடி செய்துள்ளோம்.

நெல்லை வஉசி மைதான மேற்கூரை இடிந்து விழுந்த விவகாரம் - ஒப்பந்ததாரருக்கு செலவுகளை ஏற்கும்படி நோட்டீஸ்

தற்போது பெயர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலங்கட்டி மழை தொடர்ந்து பெய்ததால் கொத்தமல்லி, பீன்ஸ், தக்காளி ஆகிய செடிகள் முறிந்தது. அதேபோல் மண்ணில் விளையும் கேரட் அளித்தமை குடியலில் வளர்த்து வந்த பசுமை குடியல் 3 ஏக்கரில் சேதம் அடைந்துள்ளது.

மேலும் அந்த மழையால் என்பது ஏக்கர் கொத்தமல்லி தோட்டங்கள் சேதம் அடைந்துள்ளது. எனவே மழை காரணமாக சேதம் அடைந்த விளை பயிர்களுக்கு வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
M.முகமது கெளஸ்
நான் முகமது கெளஸ். ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டமும் ஊடகவியல் துறையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன். டிஜிட்டல் ஊடகத்தில் எனக்கு இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளது. க்ரைம் சார்ந்த செய்திகள் எழுதுவதில் முழு ஈடுபாடு காட்டும் ஆர்வம் உண்டு. தற்போது டிஜிட்டல் ஊடகமான டைம்ஸ் ஆப் இந்தியா, சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி