ஆப்நகரம்

கிருஷ்ணகிரி கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 25 Mar 2023, 2:32 pm
கிருஷ்ணகிரி மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil administration protest
administration protest


ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
கோவையில் மக்களுக்கு தேவையான திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும்- முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி
வலியுறுத்தல்
முன்னாள் மாவட்ட செயலாளர் தங்கராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் செந்தில்குமார், வட்ட தலைவர் சரவணன், செயலாளர் முத்துராமன், பொருளாளர் இளவரசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முன்னதாக கோட்ட செயலாளர் சங்கர் வரவேற்றார்.

ஓய்வூதிய திட்டம்
ஆர்ப்பாட்டத்தில் சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும். பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இது தொடர்பான பதாகைகளை ஏந்தி நின்றனர். மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களையும் எழுப்பினர்.

அடுத்த செய்தி