ஆப்நகரம்

டாஸ்மாக் கடையில் ஓட்டைய போட்டு ஆட்டைய போட்ட பலே கும்பல்!

ஊத்தங்கரையில் அரசு டாஸ்மாக் கடையில் துளையிட்டு மதுபாட்டில்களை திருடிச்சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Samayam Tamil 17 Oct 2021, 6:18 pm

ஹைலைட்ஸ்:

  • டாஸ்மாக் கடை ஷட்டரில் துளையிட்டு திருட்டு
  • மதுபாட்டில்களை திருடிய மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil tn tasmac theft
டாஸ்மாக் கடையில் துளையிட்டு திருட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியில் எண்-2985 என்ற அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு டாஸ்மாக் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் வழக்கமான பணி முடிந்த பிறகு கடையை பூட்டிவிட்டு தங்களது வீட்டிற்கு சென்றனர்.
இன்று காலை டாஸ்மாக் கடை உள்ள பகுதிக்கு சென்ற பொதுமக்கள் பார்த்தபோது கடையின் ஷட்டரில் துளையிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு தகவல் அளித்தனர்.

தவலறிந்து வந்த ஊழியர்கள் ஊத்தங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசாரின் அறிவுறுத்தல்படி கடை மெயின் ஷட்டர் திறக்கப்பட்டது. பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பணம் மற்றும் மதுபாட்டில்கள் களவு போயிள்ளது தெரியவந்தது.

திருடுபோன மதுபாட்டில்கள் மற்றும் ரொக்கம் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் டாஸ்மாக் கடையை துளையிட்டு அடையாளம் தெரியாத நபர்கள் மதுபாட்டில்களை திருடிச்சென்ற சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி