ஆப்நகரம்

மருமகனுடன் மூழ்கிய மாமியார்; அணையில் நடந்த துயர சம்பவம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த சூளகிரி வேம்பள்ளி அணையில் மருமகன் மூழ்கி உயிருக்கு போராடினார். மருமகனை காப்பாற்ற மாமியார் தண்ணீரில் குதித்தபோது இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Samayam Tamil 21 Sep 2021, 6:16 pm

ஹைலைட்ஸ்:

  • அணை நீரில் மூழ்கிய மருமகன்
  • மாமியார் குதித்து மீட்க முயற்சி
  • இருவரும் தண்ணீரில் மூழ்கி பலி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil சடலங்களை மீட்கும் பணி நடக்கிறது
சடலங்களை மீட்கும் பணி நடக்கிறது
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த சூளகிரியை சேர்ந்தவர் பஜ்லூன் (55). இவரது மகள் முஸ்கான் என்பவருக்கும், பெங்களூருவை சேர்ந்த ஷமீர் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது.
கம்பெனி விடுமுறையை ஓட்டி ஷமீர் மற்றும் அவரது மனைவி முஸ்கான் ஆகியோர் சூளகிரியில் உள்ள மாமியர் வீட்டிற்கு வந்து இருந்தனர். இந்நிலையில் இன்று வீட்டில் இருந்த துணிகளை துவைக்க அருகே உள்ள வேம்பள்ளி அணைக்கு புதுமண தம்பதிகள் மற்றும் மாமியார் பஜ்லூன் ஆகிய மூன்று பேரும் சென்று உள்ளனர்.

பஜ்லூன் மற்றும் அவரது மகள் முஸ்கான் துணி துவைத்துக்கொண்டிருந்தனர். நீச்சல் தெரியாத நிலையில் ஷமீர் தண்ணீரில் விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற ஷமீர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார்.

இதை பார்த்ததும் மனைவி முஸ்கான் அலறி கூச்சலிட்டார். உடனே மாமியார் பஜ்லூன் ஆற்றில் குதித்து மருமகனை மீட்க முயன்றார். இந்த முயற்சியில் மாமியார், மருமகன் ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

பள்ளி ஆசிரியர்கள் கவனிங்க; நீதிமன்றம் சூப்பர் உத்தரவு!

இதுதொடர்பாக பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இருவரது சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி