கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கண்டகானப்பள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை ஒன்று மலசோனை பகுதியில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து அந்த யானையை வனப்பகுதிக்கு விரட்டினர்.
இந்த நிலையில் அந்த யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி தளி அருகே உள்ள கொல்லப்பள்ளி கிராமத்துக்குள் புகுந்தது. அங்கு விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்திய யானை கிராமத்தில் பிரதான சாலையில் ஆக்ரோஷத்துடன் சுற்றித்திரிந்தது.
சாலையில் யானை வந்ததை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓடி வீடுகளில் புகுந்து கொண்டனர். சிறிது நேரம் சாலையில் உலா வந்த யானை அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்தது.
தண்ணி பாட்டில் போல அடிக்கி வச்சிருந்த 21,000 லிட்டர் ’சரக்கு’… அதிர்ந்துபோன போலீசார்!
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் அந்த காட்டுயானை வனப்பகுதிக்குள் சென்றது.
கிராமப்பகுதிகளில் காட்டுயானை சுற்றித்திரிவதால் கொல்லப்பள்ளி, பாளையம்கோட்டை, அகலக்கோட்டை, மேடுமுத்துக்கோட்டை உள்ளிட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி தளி அருகே உள்ள கொல்லப்பள்ளி கிராமத்துக்குள் புகுந்தது. அங்கு விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்திய யானை கிராமத்தில் பிரதான சாலையில் ஆக்ரோஷத்துடன் சுற்றித்திரிந்தது.
சாலையில் யானை வந்ததை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓடி வீடுகளில் புகுந்து கொண்டனர். சிறிது நேரம் சாலையில் உலா வந்த யானை அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்தது.
தண்ணி பாட்டில் போல அடிக்கி வச்சிருந்த 21,000 லிட்டர் ’சரக்கு’… அதிர்ந்துபோன போலீசார்!
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் அந்த காட்டுயானை வனப்பகுதிக்குள் சென்றது.
கிராமப்பகுதிகளில் காட்டுயானை சுற்றித்திரிவதால் கொல்லப்பள்ளி, பாளையம்கோட்டை, அகலக்கோட்டை, மேடுமுத்துக்கோட்டை உள்ளிட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.