ஆப்நகரம்

சுடுகாட்டு வாசலில் கணவன் மனைவி தற்கொலை: உறவினர்கள் கதறி அழுகை, கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுடுகாட்டின் வாசலில் கணவன் மனைவி விஷம் அருந்திவிட்டு பிணமாகக் கிடந்த சம்பவம் பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது.

Samayam Tamil 22 Sep 2021, 6:28 pm
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். வயது 50. இவரது மனைவி சாந்தாமணி. வயது 45. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
Samayam Tamil சுடுகாட்டு வாசலில் கணவன் மனைவி தற்கொலை: உறவினர்கள் கதறி அழுகை, கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி!


இந்த சூழலில் முருகேசன் மற்றும் சாந்தாமணி இருவரும் வீட்டை விட்டு வெளியே நேற்று சென்றுள்ளனர். இருவரும் வீட்டிற்குத் திரும்பியே வரவில்லை. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் ஆணும் பெண்ணும் சடலமாக இருப்பதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பார்த்து போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் சேகரித்தனர். அதில் இவர்கள் இருவரும் கீழ்குப்பம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மற்றும் சாந்தாமணி என்பது தெரிய வந்தது.

சிறுமியிடம் சின்னத்தமாக நடத்து கொண்ட வாலிபருக்கு 20 வருஷம் ஜெயில்!
இதனைத் தொடர்ந்து அவரது உறவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் கொண்டு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இது சம்பந்தமாக போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன் மனைவி எதற்காக விஷம் குடித்து இறந்தார்கள் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி