ஆப்நகரம்

குப்பை காடான அரசு மருத்துவமனை… களத்தில் இறங்கி தூய்மை செய்த காவல்துறை!

நாள்தோறும் 300 க்கும் மேற்ப்பட்ட புறநோயாளிகள் 20 க்கும் மேற்ப்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Samayam Tamil 25 Jan 2022, 4:13 pm

ஹைலைட்ஸ்:

  • கிருஷ்ணகிரி போச்சம்பள்ளியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை
  • சுத்தம் செய்யப்படாத மருத்துவமனை வளாகம்
  • சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட காவலர்கள்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்யும் பயிற்சி காவலர்கள்
மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்யும் பயிற்சி காவலர்கள்
மத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்ட காவலர்களை, பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மத்தூரில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை வளாகத்தில், ஆங்கில மருத்துவம், சித்தமருத்துவம் மற்றும் அறுவை அரங்கம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையில், நாள்தோறும் 300 க்கும் மேற்ப்பட்ட புறநோயாளிகள் 20 க்கும் மேற்ப்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உடல் பரிசோதனைக்காக வந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள்… அலைக்கழித்த அலுவலர்கள்!

முறையான பராமரிப்புகள் ஏதும் இன்றி, மருத்துவமனை வளாகம் முழுவதும் செடிகள் படர்ந்து, குப்பை காடுகளாக காட்சியளிக்கின்றன. ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் சுத்தம் செய்யாமல் புதர் காடாக இருக்கிறது.

இந்நிலையில், சமத்துவபுரத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு எழாம் அணி பயிற்சி காவலர்கள் 50 க்கும் மேற்ப்பட்டோர், மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


இதில் செடிகள் அகற்றப்பட்டு, மருத்துவமனை வளாகம் முழுவதும் காவல்துறையினர் சுத்தம் செய்தனர். காவலர்களின் இந்த செயலுக்கு, மருத்துவ ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

அடுத்த செய்தி