ஆப்நகரம்

மாங்கனி கண்காட்சி டெண்டரில் முறைகேடு? - ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பரபரப்பு புகார்!

கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சி டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக கடை ஒப்பந்ததாரர்கள் ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது புகார் தெரிவித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 8 Jun 2022, 12:23 pm
ஈரோட்டை சேர்ந்தவர் ராஜேஷ் குமார். பொருட்காட்சிகளில் கடைகள் நடத்தும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று இரவு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் அலுவகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
Samayam Tamil krishnagiri mango festival


"கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி இந்த மாதம் 16-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த கண்காட்சியில் கடைகள் வைப்பதற்காக ஏலம் கடந்த மூன்றாம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்க நானும், பிற இடங்களில் இருந்து சிலரும் 3-ஆம் தேதி கிருஷ்ணகிரிக்கு வந்தோம்.

அப்போது, எங்களை ஆளும் கட்சியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் மற்றும் நகரச் செயலாளர் உள்ளிட்டோர் இங்கு கடைகளைப் போடக்கூடாது கூறியதோடு, மீறி டெண்டர் எடுக்க வந்தால் இங்கிருந்து செல்ல முடியாது என்று மிரட்டினார்கள். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளோம், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக கூறினார்.
உணவுக்குழாயில் சிக்கிய 5 ரூபாய் நாணயம்... பேருதவி செய்த கிருஷ்ணகிரி அரசு மருத்துவர்கள்!

ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், மீண்டும் அதிகாரிகளை சந்திக்க வந்தோம், எங்களை சந்திக்க அனுமதிக்கவில்லை . இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அரசு அதிகாரி குருராஜன் என்பவர் என்னிடம் பேசினார்.

டெண்டர் விஷயத்தில் தவறு நடந்திருப்பதாகவும் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று கூறினார். அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை அரசு அதிகாரியான அவர் கட்சிக் காரர்களிடம் விலை போய்விட்டார். மாங்கனி கண்காட்சி டெண்டரில் முறைகேடு நடந்துள்ளது. என்னிடம் அரசு அதிகாரி பேசிய உரையாடல் ஆடியோ உள்ளது . எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் டெண்டர் முறையாக விட வேண்டும் . இல்லாவிட்டால் நாங்கள் நீதிமன்றம் செல்ல உள்ளோம்" இவ்வாறு அவர் கூறினார் .

அடுத்த செய்தி