ஆப்நகரம்

பூசாரிக்கே விபூதி அடித்த உதவியாளர்; மனைவியை கொன்று போலீசில் சரண்!

மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கோவில் பூசாரி கைது செய்யப்பட்டார்.

Samayam Tamil 1 May 2021, 9:45 am
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா, பாகலுாரை சேர்ந்தவர் சென்னபசப்பா (44). இவர், அதே பகுதியில் உள்ள கால பைரவர் கோவிலில், பூசாரியாக உள்ளார். இவரது மனைவி கவுரம்மா (40). தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
Samayam Tamil கொலை செய்யப்பட்ட கவுரம்மா
கொலை செய்யப்பட்ட கவுரம்மா


கர்நாடகாவை சேர்ந்த மிருத்தியன் (23) என்பவர், சென்னபசப்பா வீட்டில் தங்கி கோவில் பணிகளுக்கு உதவி செய்து வந்தார். இந்நிலையில் கவுரம்மாவுக்கும், மிருத்தியனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இந்த தொகுதில என்ன விசேஷம்?; புதிய தேர்தல் அதிகாரி நியமனம்!

இதனை அறிந்த சென்னபசப்பா இருவரையும் கண்டித்து இனிமேலாவது கோவில் பணிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தி உள்ளார். ஆனாலும், அவர்கள் கேட்காமல் தொடர்ந்து நெருக்கமாக இருந்துள்ளனர்.

நேற்று முன்தினம் கவுரம்மா பிறந்தநாள் என்பதால் சென்னபசப்பா தனது மனைவியை வேப்பனஹள்ளி அருகே உள்ள பசவேஸ்வரா கோவிலுக்கு அழைத்து சென்றார். அங்கு
அவர்களுக்குள் கள்ளக்காதல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

2 நாளு லீவு நுழைஞ்சு போ.....; கரூரில் கொரோனா அபாயம்!

இதில் ஆத்திரம் அடைந்த சென்னபசப்பா துப்பட்டாவால் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், ஓசூர் டவுன் போலீசில் சரண் அடைந்தார். இதுதொடர்பாக, வேப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னபசப்பாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி