கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட காவேரி தெற்கு வன உயிரின சரணாலயம் உரிகம் வனச்சரகப்பகுதியில் வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பெண் யானை ஒன்று அங்கு உயிரிழந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி தலைமையில் வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். ஒரு அங்கு ஒரு யானை உயிரிழந்து கிடந்தது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அந்த யானையின் சடலத்தை வனத் துறையினர் அங்கிருந்து மீட்டனர். பின்னர் ஓசூர் வனக்கோட்ட வன கால்நடை மருத்துவ குழுவினரால் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதற்கு கென்னத் ஆண்டர்சன் நேச்சர் சொசைட்டி தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் இருந்து வினை மற்றும் அத்திநத்தம் மலைவாழ் மக்கள் சங்க தலைவர் முனியப்பன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். அந்த யானைக்கு சுமார் 30 வயது இருக்கும் என கூறப்படுகிறது.
அந்த யானையின் உடலில் வெளிப்பகுதியில் காயங்கள் காணப்படுகிறது. எனவே யானைகளுக்கு இடையிலான சண்டையின் போது அந்த யானைக்கு காயம் அடைந்து உயிரிழந்து இருக்கலாம் என்பதே உடற்கூறு ஆய்வின் வாயிலாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உரிகம் வனச்சரகத்தில் தற்போது சுமார் 70-க்கும் மேற்பட்ட யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. அவை அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளுக்கும் விவசாய நிலங்களுக்கும் உலா செல்கிறது.
அதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். அவ்வாறு காப்பு காடுகளை விட்டு வெளியே வரும் யானைகளை மீண்டும் பத்திரமாக அவைகளை காப்புக் காட்டுக்குள் அனுப்பி வைக்கும் பணியில் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் கூட காப்புக்காடுகளை சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க வனத் துறையினர் அறிவுறுத்தியும் வருகின்றனர்.
இதுபோன்று அடிக்கடி காட்டில் யானைகள் ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளும் சம்பவம் நடந்துக் கொண்டு தான் வருகிறது. வனப் பகுதியில் இருக்கும் விலங்குகளை பாதுகாக்க வனத்துறை அதிகாரிகளும் எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும் இது போன்ற அசம்பாவிதங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. தற்போது வனப் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அந்த யானையின் சடலத்தை வனத் துறையினர் அங்கிருந்து மீட்டனர். பின்னர் ஓசூர் வனக்கோட்ட வன கால்நடை மருத்துவ குழுவினரால் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதற்கு கென்னத் ஆண்டர்சன் நேச்சர் சொசைட்டி தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் இருந்து வினை மற்றும் அத்திநத்தம் மலைவாழ் மக்கள் சங்க தலைவர் முனியப்பன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். அந்த யானைக்கு சுமார் 30 வயது இருக்கும் என கூறப்படுகிறது.
அந்த யானையின் உடலில் வெளிப்பகுதியில் காயங்கள் காணப்படுகிறது. எனவே யானைகளுக்கு இடையிலான சண்டையின் போது அந்த யானைக்கு காயம் அடைந்து உயிரிழந்து இருக்கலாம் என்பதே உடற்கூறு ஆய்வின் வாயிலாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உரிகம் வனச்சரகத்தில் தற்போது சுமார் 70-க்கும் மேற்பட்ட யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. அவை அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளுக்கும் விவசாய நிலங்களுக்கும் உலா செல்கிறது.
அதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். அவ்வாறு காப்பு காடுகளை விட்டு வெளியே வரும் யானைகளை மீண்டும் பத்திரமாக அவைகளை காப்புக் காட்டுக்குள் அனுப்பி வைக்கும் பணியில் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் கூட காப்புக்காடுகளை சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க வனத் துறையினர் அறிவுறுத்தியும் வருகின்றனர்.
இதுபோன்று அடிக்கடி காட்டில் யானைகள் ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளும் சம்பவம் நடந்துக் கொண்டு தான் வருகிறது. வனப் பகுதியில் இருக்கும் விலங்குகளை பாதுகாக்க வனத்துறை அதிகாரிகளும் எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும் இது போன்ற அசம்பாவிதங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. தற்போது வனப் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.