ஆப்நகரம்

சாவிலும் இணை பிரியாத நண்பர்கள்; இப்படியா சாவு வரனும் இவங்களுக்கு?

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் சாலையோர தடுப்புச்சுவர் மீது பைக் மோதிய விபத்தில் நண்பர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 9 Jun 2021, 11:58 am
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, சென்னப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரப்பா. இவரது மகன் ஹரீஷ் (26). இவரது நண்பர் சின்னசென்னப்பள்ளியை சேர்ந்த வெங்கடாஜலபதி (38). இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். ஹரீஷ், வெங்கடாசலபதி இருவருமே டிரைவர்களாக வேலை செய்து வந்தனர்.
Samayam Tamil விபத்தில் பலியான நண்பர்கள்
விபத்தில் பலியான நண்பர்கள்


நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் இருவரும் வேலை முடிந்ததும் ஓசூரில் இருந்து பைக்கில் சென்னப்பள்ளியை நோக்கி வந்து கொண்டு இருந்தனர். பெங்களூரு-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே வந்தபோது இவர்களது பைக் திடீரென நிலை தடுமாறியுள்ளது.

பின்னர் திடீரென சாலை நடுவில் இருந்த தடுப்புச்சுவர் மீது பைக் பயங்கரமாக மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டதில் ஹரீஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். வெங்கடாஜலபதி படுகாயம் அடைந்து துடித்தார்.

‘உன்னுடைய ஆபாச வீடியோ இருக்கு’; சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை!

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக வாகன ஓட்டிகள் வெங்கடாஜலபதியை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, தீவிர சிகிச்சைகள் அளித்தும் வெங்கடாஜலபதி இறந்தார். விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி