ஆப்நகரம்

கொரோனாவுக்கு மாமன், மச்சான் பலி; இந்த மாவட்டத்தில் இப்படி ஒரு சோகமா?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தில் கொரோனா நோய்க்கு இருவர் பலியாகி உள்ளனர். கொரோனா நோய்க்கு தொடர் உயிர்பலி ஏற்பட்டு வருவதால் மாவட்ட மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Samayam Tamil 10 May 2021, 11:10 am
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரமாக உள்ளது. அதனால் 2400க்கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
Samayam Tamil கொரோனாவுக்கு பலியான மாமன், மைத்துனர்
கொரோனாவுக்கு பலியான மாமன், மைத்துனர்


அதேப் போன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இறப்பு எண்ணிக்கை 200 ஐ தாண்டி உள்ளது. அந்தவகையில் ஓசூரில் ஸ்டுடியோ நடத்தி வந்தவர் நிக்சன். இவரது மைத்துனர் வில்சன். இருவரும் கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

போதையில் சித்தப்பா செய்த காரியம்; கிராம மக்கள் அதிர்ச்சி!

இந்த நிலையில் நேற்று இருவரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். அதேபோல் கிருஷ்ணகிரியில் காவல் துறையில் பணியாற்றி வந்த காவலர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். கொரோனா நோய்க்கு தொடர் உயிர்பலி ஏற்பட்டு வருவதால் மாவட்ட மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி