ஆப்நகரம்

ஆந்திராவில் ஊரடங்கு; கிருஷ்ணகிரியில் வாகனங்கள் நிறுத்தம்

ஆந்திரா மாநிலத்தில் நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் ஆந்திரா-கிருஷ்ணகிரி எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பப்படுகின்றன. மேலும் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குள் நடை பயணமாக வரும் நபர்கள் மட்டும் முறையாக பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர்.

Samayam Tamil 6 May 2021, 9:51 am
இந்தியா முழுவதும் கொரோனா எனும் பெருந்தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமான உயிர்பலி ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு மற்றும் பகுதி நேர ஊரடங்கு என அந்தந்த மாநில அரசுகள் அமல்படுத்தி மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
Samayam Tamil கிருஷ்ணகிரி எல்லையில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன.
கிருஷ்ணகிரி எல்லையில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன.


அந்தவகையில் நமது அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு மிகவும் மோசமாக உள்ளது. இதன் காரணமாக கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக நேற்று மதியம் 12 மணி முதல் முழு ஊரடங்கை மாநில அரசு அமல்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக ஆந்திர மாநிலம் குப்பம், சித்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நோக்கி சென்ற வாகனங்கள் அனைத்தும் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டன.

சிம்பிளாக நடக்கும் ஏற்பாடு; முதல்வராக நாளை பதவி ஏற்கிறார் ரங்கசாமி!

மேலும், ஆந்திராவில் இருந்து தமிழகம் நோக்கி வந்த வாகனங்கள் அனைத்தும் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டன. மேலும் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குள் நடை பயணமாக வரும் நபர்கள் மட்டும் முறையாக பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து தமிழகம்-கிருஷ்ணகிரி எல்லையோரம் வசிக்கும் மக்கள் கூறியதாவது:

ஆந்திராவில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அங்குள்ள தமிழர்கள் அங்கிருந்து இடம் மாறி தமிழ்நாட்டை தேடி வருகின்றனர். இதில் சிலர் முறையாக பரிசோதனை செய்துகொண்டு வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் பரிசோதனை செய்யாமல் வந்து விடுகின்றனர். இதனால் எங்களுக்கு அச்சமாக உள்ளது. எனவே, எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்வதை கடுமையாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அடுத்த செய்தி