ஆப்நகரம்

ஆலமரத்திற்கு 102ஆவது பிறந்தநாள்: கேக் வெட்டி மதுரைக்காரங்க கெத்தா கொண்டாட்டம்!

மதுரையில் ஆலமரத்திற்கு 102ஆவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பொதுமக்களின் செயல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் நாட்டு மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி சிறுவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

Samayam Tamil 26 Jul 2021, 7:38 am
மதுரை மீனாட்சிபுரம் கண்மாய்கரை பகுதியில் 7க்கும் மேற்பட்ட ஆலமரங்கள் செழிப்பாக வளர்ந்திருந்தது. ஒவ்வொரு ஆலமரங்களும் முறையாகப் பராமரிக்காத நிலையில் 6மரங்களும் காய்ந்துபோனது. இப்போதைய நேரத்தில் மீதியுள்ள ஒரே ஒரு ஆலமரமானது நூற்றாண்டைக் கடந்து வாழ்ந்து வருகிறது.
Samayam Tamil ஆலமரத்திற்கு 102ஆவது பிறந்தநாள்: கேக் வெட்டி மதுரைக்காரங்க கெத்தா கொண்டாட்டம்!


இந்த சூழலில் நூற்றாண்டு கடந்த குறிப்பிட்ட ஆலமரத்தைப் பாதுகாக்கக் கோரி அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து ஆண்டுதோறும் பிறந்தநாள் விழா கொண்டாடி வருகின்றனர்.

அப்படி மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஆலமரத்தின் 102ஆவது பிறந்தாளை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் நீர்நிலை இயக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்ட விழிப்புணர்வை முன்னெடுத்தனர்.

டேக்வாண்டோவில் மதுரை பொறியாளர் அதிசய உலக சாதனை: மோடிக்கு சமர்ப்பித்தார்!
இந்த நிகழ்வின் ஒருபகுதியாக நாட்டு இன மரங்களைப் பாதுகாக்கும் வகையில் சிறுவர்களுக்கு ஆலமரக்கன்றுகளை வழங்கி அதனை கண்மாய்கரைகளில் நடவைத்தனர்.

மனிதர்களுக்குச் சுத்தமான ஆக்சிஜனை வழங்கும் ஆலமரத்திற்கு மனிதர்களைப் போன்று பிறந்தநாள் கொண்டாடிய மதுரை மக்களின் மனங்களுக்குப் பாராட்டுதல்கள் குவிந்துவருகிறது. மரங்களின் தேவை குறித்து வருங்கால சந்ததியினருக்கு உணர்த்தும் வகையிலும், நாட்டு இன மரங்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும் இப்படி பிறந்தநாள் கொண்டாடியதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி