ஆப்நகரம்

இவர் வேற மாதிரி: அதிரடி காட்டும் மதுரை எஸ்பி!

மதுரை மாவட்டத்தில் பொது மக்களிடம் இருந்து காணாமல் போன 70 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Samayam Tamil 27 Jan 2022, 4:58 pm
மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் உள்ளது கடந்த சில மாதங்களாகவே செல்போன் பறிப்பு, செல்போன் திருட்டு என நிறைய வழக்குகள் பதிவாகி வந்த நிலையில், மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் பதிவு செய்யப்பட்ட செல்போன் பறிப்பு மற்றும் செல்போன் காணமால் போன வழக்குகளை விரைந்து விசாரணை செய்து செல்போன்களை பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
Samayam Tamil மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன்


இதனையடுத்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி, காவல் ஆய்வாளர் திருமதி சார்மிங் ஓய்ஸ் லின், மற்ற மூன்று சார்பு ஆய்வாளர்கள் உட்பட 8 காவலர்கள் சிறப்பாக பணியாற்றி செல்போன்களின் சர்வதேச செல்போன் அடையாள ஐ.எம்.இ.ஐ குறியீட்டு எண்களை கொண்டும், செல்போன் நிறுவனங்களின் உதவி கொண்டும் மாவட்ட பகுதிகளில் பொது மக்களிடமிருந்து வழிப்பறி மற்றும் தவறவிட்ட 70 மொபைல்போன்களை கண்டறிந்து மீட்டனர்.
நடவடிக்கை எடுங்க இல்லைனா எடுக்க வைப்போம்… மிரட்டும் உசிலம்பட்டி இளைஞர்கள்!
இன்று மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள் தலைமையில் செல்போன்கள் தவறவிட்ட அனைவரையும் அழைத்து அழைத்து அவரவர்களின் செல்போன்கள் வழங்கப்பட்டன.

மேலும் வங்கிகளில் இருந்து பேசுவதாக கூறி பொதுமக்கள் வங்கிக் கணக்கு விவரங்களை தெரிந்துகொண்டு நூதன முறையில் நடந்த திருட்டு வழக்குகளை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்களின் துரித நடவடிக்கையால் கடந்த 5 மாதங்களில் 5,68,500/ மற்றும் இதுவரை 24, 14,636 ரூபாய் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
பூட்டு போட்ட முஸ்லிம் முன்னேற்ற கழகம்… ஓடிவந்த அதிகாரிகள்!
மேலும் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரும் பகுதியான புறநகர் பகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. ஒரு சில பகுதிகள் பதட்டமான பகுதிகளில் ஆய்வு செய்து அதற்கான போதிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என காவல்தறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அடுத்த செய்தி