ஆப்நகரம்

16 வயது சிறுமியை 600 பேர் பாலியல் பலாத்காரம்: ஆட்டோ டிரைவர், தரகர் என 12 பேர் கைது!

மதுரையில் 16 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சிறுமியை இதுவரை 600க்கும் மேற்பட்டோரிடம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் முகவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 27 Dec 2020, 11:36 am
மதுரை கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெற்றோரை இழந்த சிறுமியைக் கடந்த 2015ஆம் ஆண்டு ஜெயலட்சுமி என்ற உறவினர் அழைத்துச் சென்று வளர்த்து வந்துள்ளார். இதற்கிடையே ஜெயலட்சுமி பாலியல் தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அந்த சிறுமிக்கு வயது 10.
Samayam Tamil பாலியல் தரகர்கள் கைது
பெண் பாலியல் தரகர்கள் கைது -மதுரை


அதன்பின் 13வயதில் பூப்படைந்த நிலையில் ஜெயலட்சுமி தன்னை நம்பி வந்த சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். கடந்த 5ஆண்டுகளில் மட்டும் ஜெயலட்சுமி தன்னுடனிருக்கும் பாலியல் பெண் முகவர்களான அனார்கலி, சுமதி, ஐஸ் சந்திரா, தங்கம், ஜெயலட்சுமி, சரசின்னதம்பி ஆகியோர் உதவியுடன் மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்ட மாநிலங்களைச் சேர்ந்த நபர்களுடன் சிறுமியை அனுப்பி வைத்துள்ளார்.

இந்த சூழலில் மதுரை மாவட்டத்தில் பாலியல் தொழிலில் முக்கிய புள்ளியாகத் தேடப்பட்டுவந்த சிறுமியின் உறவினர் ஜெயலட்சுமி உள்ளிட்ட 5 பெண் முகவர்களையும் ஆட்கடத்தல் விபச்சார தடுப்பு காவல்துறையினர் பின்தொடர்ந்து கைது செய்ய முயன்றபோது பல முறை தப்பிச் சென்றுள்ளனர்.

இதற்கிடையே, மதுரை உத்தங்குடி அருகேயுள்ள விஐபி நகர்ப் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாகவும் அழைத்துச் சென்று துன்புறுத்துவதாகவும் ஆட்கடத்தல் விபச்சாரத் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

மதுரை மருத்துவக் கல்லூரியில் அடுத்து 3 மாணவர்க்குத் தொற்று உறுதி!

இதன் அடிப்படையில் ஆய்வாளர் ஹேமமாலா தலைமையிலான தனிப்படை ஒன்று குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று சிறுமியை மீட்டு சரவண பிரபு உட்பட 5 பெண் முகவர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்தவர்கள் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் பாலியல் தொழிலில் முக்கிய புள்ளிகளாகத் தேடப்பட்டுவந்த 5 பெண் முகவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் சிறுமியிடம் கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் சித்திரவதை செய்து வந்த 600க்கும் மேற்பட்ட நபர்களின் விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். அவர்களின் தகவல் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்டவர்களையும் கைது செய்ய வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி