ஆப்நகரம்

மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் நிகழ்த்திய அதிசயம்!

1970 ஆம் ஆண்டில் படித்து முடித்த தியாகராசர் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்தித்து மகிழ்ந்தனர்.

Samayam Tamil 29 Sep 2021, 8:33 am

ஹைலைட்ஸ்:

  • மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.
  • 1970 பேட்ஜ் மாணவர்கள் ஒன்றாக கூடி மகிழ்ந்தனர்.
  • கல்லூரியின் வளர்ச்சிக்காகவும் அவர்கள் நிதியுதவி அளித்தனர.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
மதுரை திருப்பரங்குன்றம் தாலுகாவில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியான தியாகராசர் பொறியியல் கல்லூரியில் 1970 ஆம் ஆண்டில் படித்து முடித்த முன்னாள் மாணவர்கள் ஐம்பது ஆண்டுகள் கழித்து இன்று கல்லூரியில் மீண்டும் ஒன்றுகூடி ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது கடந்தகால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். நேரிவ வர இயலாத மாணவர்கள் ஆன்லைன் மூலமாக விழாவில் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.

இந்த சந்திப்பின் முக்கிய நிகழ்வாக, முன்னாள் மாணவர்கள் அனைவரும் தங்களால் இயன்ற தொகையை திரட்டி கல்லூரியின் வளர்ச்சி நிவாரண நிதியாக வழங்கினர்.

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி... மதுரை சாதனை நாயகன் சொல்லும் ரகசியத்தை கேளுங்க!

மேலும் எதிர்காலத்தில் கல்லூரிக்கு எந்தவொரு உதவி என்றாலும் தாங்கள் முன்வந்து செய்வதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.

முன்னாள் மாணவர்கள் அனைவரும் 60 வயதை கடந்திருந்தாலும், பசுமரத்து ஆணியை போல் அவர்கள் மனதில் பதிந்துள்ள கல்லூரி கால பசுமையான நினைவுகளை முன்னாள் மாணவர்கள் மிகழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.


கல்லூரி காலத்தில் அவர்களுக்கு இருந்த பட்டப்பெயர்களை நினைவுகூர்ந்து பழைய குறும்புடன் அப்பெயர்களை சொல்லி அழைத்து ஆனந்தமடைந்தனர்.

அடுத்த செய்தி