ஆப்நகரம்

துணிக்கடையில் தீ விபத்து... வீரர்கள் இருவர் பலி

அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது

Samayam Tamil 14 Nov 2020, 10:07 am
மதுரையில் துணிக்கடையில் தீப்பற்றி எரிந்து, மீட்புப்பணியில் ஈடுபட்டு வந்த தீயணைப்பு வீரர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil fire file shot


மதுரை விளக்குத்தூண் பகுதியிலுள்ள நவபத் கானா தெருவில், பிரபல துணிக்கடை ஒன்று உள்ளது. நெடுங்காலமாக இயங்கி வ்யரும் இந்த துணிக்கடை, ஒரு பழைய கட்டடத்தில் இயங்கி வந்தது. தீபாவளி விற்பனை களைகட்டி வந்த நிலையில், நேற்று இரவு இந்த கடையில் தீ பற்றியது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், மதுரை சிட்டி மற்றும் அனுப்பானடி நிலையங்களிலிருந்து தீயணைப்பு வீரர்கள் சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீபாவளிக்கு துணி பார்சல்கள் நிறைய வைக்கப்பட்டிருந்ததால், தீ மளமளவென வேகமாக பரவியது.

இந்நிலையில், திடீரென கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் கிருஷ்ணமூர்த்தி(30), சிவராஜன்(36) இறந்தனர். மேலும் கல்யாண குமார்(30), சின்னகருப்பு(30) ஆகியோர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் அப்பகுதி தீபாவளி மகிழ்ச்சியின்றி சோகமாக காணப்பட்டது.

அடுத்த செய்தி